பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புறப்பட நீதிபதிகள் அனுமதி!
Jul 23, 2025, 09:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புறப்பட நீதிபதிகள் அனுமதி!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

303 இந்தியப் பயணிகளுடன் நிகராகுவா சென்ற விமானம், பிரான்ஸில் 3 நாள்களாக தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், விமானப் பயணிகளிடம் நடத்திய விசாரணையை ரத்து செய்துவிட்டு, திங்கள்கிழமை காலை விமானம் புறப்பட நீதிபதிகள் அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, நிகராகுவா நாட்டுக்கு 303 இந்திய பயணிகளுடன் கடந்த 21-ம் தேதி வாடகை விமானம் ஒன்று சென்றது. அந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள கிழக்கு வாட்ரி நகர விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

ஆனால், அந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடைபெறுவதாக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விமானம் புறப்பட பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும், அந்த விமான நிலையத்துக்கு அந்நாட்டு காவல்துறை சீல் வைத்தது.

இதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனா். இதன் பிறகு, பயணிகள் மற்றும் விமான பணிக் குழுவிடம் சிறப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் 2 பேர் மேல் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பிரான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஆள்கடத்தல் குற்றச்சாட்டு தொடா்பாக பயணிகளிடம் 4 நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பயணிகளில் பலர் இந்தியிலும், மற்றவர்கள் தமிழிலும் பேசினர்.

இதையடுத்து, நீதிபதிகளின் விசாரணைக்கு மொழிபெயா்ப்பாளா்கள் உதவினர். அப்போது, பயணிகள் தங்கள் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். இதைத் தொடர்ந்து, விசாரணையை ரத்து செய்த நீதிபதிகள் விமானம் புறப்பட அனுமதி அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. ஆனால், எங்கே செல்கிறது என்பது தெரியவில்லை. அந்த விமானத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதால் விமானம் இந்தியா செல்லுமா அல்லது செல்ல வேண்டிய இடம் நிகராகுவே என்பதால் அங்கு செல்லுமா அல்லது துபாய் செல்லுமா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

Tags: Franceflight303 Indians
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் எகிறும் கொரோனா பாதிப்பு!

Next Post

வாஜ்பாய் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்! – பிரதமர் மோடி

Related News

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies