பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புறப்பட நீதிபதிகள் அனுமதி!
Mar 15, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புறப்பட நீதிபதிகள் அனுமதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 25, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

303 இந்தியப் பயணிகளுடன் நிகராகுவா சென்ற விமானம், பிரான்ஸில் 3 நாள்களாக தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், விமானப் பயணிகளிடம் நடத்திய விசாரணையை ரத்து செய்துவிட்டு, திங்கள்கிழமை காலை விமானம் புறப்பட நீதிபதிகள் அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, நிகராகுவா நாட்டுக்கு 303 இந்திய பயணிகளுடன் கடந்த 21-ம் தேதி வாடகை விமானம் ஒன்று சென்றது. அந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள கிழக்கு வாட்ரி நகர விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

ஆனால், அந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடைபெறுவதாக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விமானம் புறப்பட பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும், அந்த விமான நிலையத்துக்கு அந்நாட்டு காவல்துறை சீல் வைத்தது.

இதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனா். இதன் பிறகு, பயணிகள் மற்றும் விமான பணிக் குழுவிடம் சிறப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் 2 பேர் மேல் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பிரான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஆள்கடத்தல் குற்றச்சாட்டு தொடா்பாக பயணிகளிடம் 4 நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பயணிகளில் பலர் இந்தியிலும், மற்றவர்கள் தமிழிலும் பேசினர்.

இதையடுத்து, நீதிபதிகளின் விசாரணைக்கு மொழிபெயா்ப்பாளா்கள் உதவினர். அப்போது, பயணிகள் தங்கள் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். இதைத் தொடர்ந்து, விசாரணையை ரத்து செய்த நீதிபதிகள் விமானம் புறப்பட அனுமதி அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. ஆனால், எங்கே செல்கிறது என்பது தெரியவில்லை. அந்த விமானத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதால் விமானம் இந்தியா செல்லுமா அல்லது செல்ல வேண்டிய இடம் நிகராகுவே என்பதால் அங்கு செல்லுமா அல்லது துபாய் செல்லுமா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

Tags: Franceflight303 Indians
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் எகிறும் கொரோனா பாதிப்பு!

Next Post

வாஜ்பாய் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்! – பிரதமர் மோடி

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies