பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புறப்பட நீதிபதிகள் அனுமதி!
Jul 28, 2026, 10:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புறப்பட நீதிபதிகள் அனுமதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 25, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

303 இந்தியப் பயணிகளுடன் நிகராகுவா சென்ற விமானம், பிரான்ஸில் 3 நாள்களாக தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், விமானப் பயணிகளிடம் நடத்திய விசாரணையை ரத்து செய்துவிட்டு, திங்கள்கிழமை காலை விமானம் புறப்பட நீதிபதிகள் அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, நிகராகுவா நாட்டுக்கு 303 இந்திய பயணிகளுடன் கடந்த 21-ம் தேதி வாடகை விமானம் ஒன்று சென்றது. அந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள கிழக்கு வாட்ரி நகர விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

ஆனால், அந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடைபெறுவதாக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விமானம் புறப்பட பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும், அந்த விமான நிலையத்துக்கு அந்நாட்டு காவல்துறை சீல் வைத்தது.

இதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனா். இதன் பிறகு, பயணிகள் மற்றும் விமான பணிக் குழுவிடம் சிறப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் 2 பேர் மேல் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பிரான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஆள்கடத்தல் குற்றச்சாட்டு தொடா்பாக பயணிகளிடம் 4 நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பயணிகளில் பலர் இந்தியிலும், மற்றவர்கள் தமிழிலும் பேசினர்.

இதையடுத்து, நீதிபதிகளின் விசாரணைக்கு மொழிபெயா்ப்பாளா்கள் உதவினர். அப்போது, பயணிகள் தங்கள் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். இதைத் தொடர்ந்து, விசாரணையை ரத்து செய்த நீதிபதிகள் விமானம் புறப்பட அனுமதி அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. ஆனால், எங்கே செல்கிறது என்பது தெரியவில்லை. அந்த விமானத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதால் விமானம் இந்தியா செல்லுமா அல்லது செல்ல வேண்டிய இடம் நிகராகுவே என்பதால் அங்கு செல்லுமா அல்லது துபாய் செல்லுமா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

Tags: Franceflight303 Indians
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் எகிறும் கொரோனா பாதிப்பு!

Next Post

வாஜ்பாய் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்! – பிரதமர் மோடி

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies