ஜெக்தீப் தன்கரை போல 1,000 முறை மிமிக்ரி செய்வேன்: திரிணாமுல் எம்.பி. சர்ச்சை பேச்சு!
Jul 24, 2025, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெக்தீப் தன்கரை போல 1,000 முறை மிமிக்ரி செய்வேன்: திரிணாமுல் எம்.பி. சர்ச்சை பேச்சு!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை போல இமிடேட் செய்து மிமிக்ரி செய்தது கடும் சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் தன்கரை போலவே மிமிக்ரி செய்ததோசு, 1,000 முறைகூட மிமிக்ரி செய்வேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, பார்வையாளர்கள் மாடத்திலிருந்த 2 பேர் மக்களவைக்குள் குதித்து கலர் புகைக் குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளில் இருந்தும் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, அவை நடவடிக்கையின்போது மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் நடந்துகொள்வதைப் போல இமிடேட் செய்தும், மிமிக்ரி செய்தும் கேலி கிண்டல் செய்தார்.

இதை காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இந்த சம்பவம் கடும் சர்ச்சையான நிலையில், மாநிலங்களவையில் பேசிய ஜெக்தீப் தன்கர் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், ஆளும் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து, குடியரசுத் துணைத் தலைவரை அவமானப்படுத்தும் நோக்கில் தான் அவ்வாறு செய்யவில்லை என்றும், இது ஒரு கலை என்றும் கல்யாண் பானர்ஜி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சற்றே அடங்கி இருந்த நிலையில், திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மீண்டும் ஜெக்தீப் தன்கரை போல மிமிக்ரி செய்திருக்கிறார்.

மேலும், “நான் மிமிக்ரி செய்து கொண்டேதான் இருப்பேன். இது ஒரு கலை. தேவைப்பட்டால் 1,000 முறைகூட செய்வேன். எனது கருத்தை தெரிவிக்க எனக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் உள்ளன. நீங்கள் என்னை சிறையில் அடைத்தாலும் நான் பின்வாங்க மாட்டேன்” என்றும் கூறியிருக்கிறார். இதனால், இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா, “கல்யாண் பானர்ஜி குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை போல ‘மிமிக்ரி’ செய்தது அவரது உரிமை என்று கூறுகிறார். அதோடு, தனது தாயிடம் சிறு குழந்தை போல் ஜெக்தீப் தன்கர் குறை கூறக்கூடாது என்றும் கூறுகிறார். இண்டி கூட்டணியினரும், ராகுல் காந்தியும் கல்யாண் பானர்ஜியை தைரியப்படுத்துகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: TMC MPJagdeep DhankarKalyan BanerjeeImitate
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் செய்த அநியாயம்!

Next Post

பாரீஸ் ஒலிம்பிக்கில் எங்கள் இடத்தை பிடிப்போம்! – ஹாக்கி வீராங்கனை

Related News

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies