ஜெக்தீப் தன்கரை போல 1,000 முறை மிமிக்ரி செய்வேன்: திரிணாமுல் எம்.பி. சர்ச்சை பேச்சு!
Oct 25, 2025, 08:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெக்தீப் தன்கரை போல 1,000 முறை மிமிக்ரி செய்வேன்: திரிணாமுல் எம்.பி. சர்ச்சை பேச்சு!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை போல இமிடேட் செய்து மிமிக்ரி செய்தது கடும் சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் தன்கரை போலவே மிமிக்ரி செய்ததோசு, 1,000 முறைகூட மிமிக்ரி செய்வேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, பார்வையாளர்கள் மாடத்திலிருந்த 2 பேர் மக்களவைக்குள் குதித்து கலர் புகைக் குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளில் இருந்தும் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, அவை நடவடிக்கையின்போது மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் நடந்துகொள்வதைப் போல இமிடேட் செய்தும், மிமிக்ரி செய்தும் கேலி கிண்டல் செய்தார்.

இதை காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இந்த சம்பவம் கடும் சர்ச்சையான நிலையில், மாநிலங்களவையில் பேசிய ஜெக்தீப் தன்கர் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், ஆளும் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து, குடியரசுத் துணைத் தலைவரை அவமானப்படுத்தும் நோக்கில் தான் அவ்வாறு செய்யவில்லை என்றும், இது ஒரு கலை என்றும் கல்யாண் பானர்ஜி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சற்றே அடங்கி இருந்த நிலையில், திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மீண்டும் ஜெக்தீப் தன்கரை போல மிமிக்ரி செய்திருக்கிறார்.

மேலும், “நான் மிமிக்ரி செய்து கொண்டேதான் இருப்பேன். இது ஒரு கலை. தேவைப்பட்டால் 1,000 முறைகூட செய்வேன். எனது கருத்தை தெரிவிக்க எனக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் உள்ளன. நீங்கள் என்னை சிறையில் அடைத்தாலும் நான் பின்வாங்க மாட்டேன்” என்றும் கூறியிருக்கிறார். இதனால், இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா, “கல்யாண் பானர்ஜி குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை போல ‘மிமிக்ரி’ செய்தது அவரது உரிமை என்று கூறுகிறார். அதோடு, தனது தாயிடம் சிறு குழந்தை போல் ஜெக்தீப் தன்கர் குறை கூறக்கூடாது என்றும் கூறுகிறார். இண்டி கூட்டணியினரும், ராகுல் காந்தியும் கல்யாண் பானர்ஜியை தைரியப்படுத்துகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: TMC MPJagdeep DhankarKalyan BanerjeeImitate
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் செய்த அநியாயம்!

Next Post

பாரீஸ் ஒலிம்பிக்கில் எங்கள் இடத்தை பிடிப்போம்! – ஹாக்கி வீராங்கனை

Related News

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies