ஹமாஸை அழிக்கும் வரை போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் உறுதி!
Jul 25, 2025, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸை அழிக்கும் வரை போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் உறுதி!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தப் போருக்கு அதிக விலையை நாங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை. ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி காலையில் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி, அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.

அதோடு, வெளிநாட்டினர் உட்பட இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்த நிலையில், 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் பதிலடித் தாக்குதலை தொடங்கியது. இத்தாக்குதல் இன்றுவரை நீடித்து வருகிறது. இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 40,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.

மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், முக்கிய முகாம்கள், பதுங்குக் குழிகள், சுரங்கப் பாதைகள் என ஏராளமான தீவிரவாத இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது. சமீபத்தில்கூட 4 கி.மீ. நீளம் கொண்ட அதிநவீன வசதிகள் கொண்ட சுரங்கப் பாதையை இஸ்ரேல் இராணுவம் அழித்தது.

எனினும், இத்தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகி வருவதால் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. உட்பட உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போரை நிறுத்த சம்மதிக்கவில்லை. போர் தொடரும் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

இந்த நிலையில், இஸ்ரேல் இராணுவம் நேற்று மிகப்பெரிய தாக்குதலை நடத்தி இருக்கிறது. தெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உள்ள மகாஜி அகதிகள் முகாம் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு, இத்தாக்குதலில் குறைந்தபட்சம் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மேற்குக் கரையில் உள்ள கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான பெத்தலகேம் மாநகரம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகிறது.

இதனிடையே, இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு கத்தாரும், எகிப்தும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில்தான், இந்தப் போருக்கு அதிக விலையை நாங்கள் கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. போரை நடத்தித்தான் ஆக வேண்டும். எனவே, ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும்” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

Tags: KazaHamasPM NetanyaguWAR
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு முன்னோடி என்றால் அது மிகையாகாது! – அண்ணாமலை

Next Post

குற்றவியல் சட்ட மசோதா : குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies