நியூஸ் கிளிக் அமித் சக்கரவர்த்தி அப்ரூவராக மாறுவதாக மனு!
Jul 26, 2025, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியூஸ் கிளிக் அமித் சக்கரவர்த்தி அப்ரூவராக மாறுவதாக மனு!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மனிதவளத் தலைவர் அமித் சக்கரவர்த்தி அப்ரூவராக மாற விரும்புவதாகவும், 164-ன் கீழ் அறிக்கை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

டெல்லி, மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு நியூஸ் கிளிக் ஆன்லைன் செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சீனப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில் செய்தி வெளியிடுவதற்கும் சீனாவின் ஆதரவாளரான அமெரிக்கவைச் சேர்ந்த பில்லியனர் நெவில் ராய் சிங்கமிடம் இருந்து பணம் பெற்றதாகவும், தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை நியூஸ் கிளக் நிறுவனத்தின் மீதான நடவடிக்கைகளைத் தொடங்கின. மேலும், இது தொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து, நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா, மனித வள மேம்பாட்டு அதிகாரி அமித் சக்கரவர்த்தி ஆகியோரை கடந்த அக்டோபர் மாதம் கைது செய்தது.

மேலும், இருவர் மீதும் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான உபாவில் வழக்குப் பதிந்தது. இதன் பிறகு, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு நியூஸ் கிளிக் ஆன்லைன் போர்ட்டலின் அலுவலகம், அதனுடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தியது.  டெல்லி, நொய்டா, குருகிராம், மும்பை மற்றும் காஜியாபாத் என குறைந்தது 35 இடங்களில் இச்சோதனை நடந்தது.

இதில் பத்திரிகையாளர்கள், பகுதி நேர பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கார்ட்டூனிஸ்ட்கள் என 46 பேரிடம் டெல்லி போலீஸார் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து, அவர்களின் மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, இவ்வழக்கு கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை முடிக்க கூடுதலாக 3 மாதம் அவகாசம் கோரி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் போலீஸார் விண்ணப்பம் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி ஹர்தீப் கௌர், டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவுக்கு மேலும் 2 மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், நியூஸ்கிளிக் போர்ட்டலின் மனிதவளத் தலைவர் அமித் சக்ரவர்த்தி, இந்த வழக்கில் அப்ரூவராக மாற விரும்புவதாகவும், 164-ன் கீழ் அறிக்கை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதேசமயம், இந்த விவகாரத்தில் பிரபீர் புர்காயஸ்தா உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவலை நீதிமன்றம் ஜனவரி 2024 வரை நீட்டித்திருக்கிறது.

Tags: News ClickAmit ChakravartyMoves Pleaturn approver
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மீண்டும் மழை!

Next Post

மழை வெள்ளம் குறித்து பிரதமரிடம் அறிக்கை! – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies