பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: இந்தியா வந்தடைந்தது!
Jul 25, 2025, 09:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: இந்தியா வந்தடைந்தது!

Web Desk by Web Desk
Dec 26, 2023, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துபாயிலிருந்து 303 இந்தியப் பயணிகளுடன் நிகராகுவா சென்று கொண்டிருந்த விமானம் பிரான்ஸில் விசாரணைக்காக தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 276 இந்தியர்களுடன் இன்று காலை மும்பை வந்தடைந்தது.

துபாயிலிருந்து 303 இந்தியப் பயணிகளுடன், மத்திய அமெரிக்காவில் உள்ள நிகராகுவ நாட்டிற்கு ஏர்பஸ் ஏ340 பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் நிகராகுவ நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு சென்று கொண்டிருந்தது.

பிரான்ஸ் எல்லைப்பகுதியில் பறந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறக்க அனுமதி கிடைத்ததும், கிழக்கு பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் வந்த பயணிகளிடம் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விமானத்தில் மனித கடத்தல் நடந்திருக்கலாம் என்று பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

இதனால் பிரான்ஸ் அதிகாரிகள் உடனடியாக விமானத்தை மீண்டும் பறக்க விடாமல் தடுத்து, இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து பிரான்ஸ் அதிகாரிகள் இந்திய தூதரகத்திற்குத் தகவல் கொடுத்தனர். இந்தியத் தூதரக அதிகாரிகள் அங்கு சென்று இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை செய்தனர்.

இது தொடா்பாக பயணிகளிடம் பிரான்ஸ் நீதிபதிகள் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினா். நீதிபதிகளின் விசாரணைக்கு மொழிபெயா்ப்பாளா்கள் உதவினர். பயணிகளில் சிலா் இந்தியிலும், தமிழிலும் பேசினா். பயணிகள் தங்கள் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினர்.

இந்த விசாரணையில் விமானத்தில் பயணித்த அனைவரும் உரிய அனுமதியுடன் பயணித்ததும், மனித கடத்தலில் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்தது. விமானம் மீண்டும் புறப்பட அனுமதி வழங்கி ஞாயிற்றுகிழமை பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகளில் 25 பேர் பிரான்ஸில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனர். மேலும், இருவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதையடுத்து, 276 பயணிகளுடன் விமானம் நிக்ராகுவா நாட்டிற்கு புறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கப்பட்ட விமானம் நிக்ராகுவா நாட்டிற்கு செல்லாது என்றும், விமானம் இந்தியாவுக்கு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 276 இந்தியர்களுடன் பிரான்ஸின் வட்ரே விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட விமானம் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்தியா வந்தடைந்தது. மும்பை வந்த பயணிகளுடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: airoplane
ShareTweetSendShare
Previous Post

பெண் ஊழியர்களுக்கு ‘எளிமையான வாழ்க்கையை’ உருவாக்க அரசு தொடர்ச்சியான முன்முயற்சிகளை எடுத்துள்ளது!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies