பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: இந்தியா வந்தடைந்தது!
Jun 14, 2026, 06:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: இந்தியா வந்தடைந்தது!

Murugesan M by Murugesan M
Dec 26, 2023, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துபாயிலிருந்து 303 இந்தியப் பயணிகளுடன் நிகராகுவா சென்று கொண்டிருந்த விமானம் பிரான்ஸில் விசாரணைக்காக தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 276 இந்தியர்களுடன் இன்று காலை மும்பை வந்தடைந்தது.

துபாயிலிருந்து 303 இந்தியப் பயணிகளுடன், மத்திய அமெரிக்காவில் உள்ள நிகராகுவ நாட்டிற்கு ஏர்பஸ் ஏ340 பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் நிகராகுவ நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு சென்று கொண்டிருந்தது.

பிரான்ஸ் எல்லைப்பகுதியில் பறந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறக்க அனுமதி கிடைத்ததும், கிழக்கு பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் வந்த பயணிகளிடம் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விமானத்தில் மனித கடத்தல் நடந்திருக்கலாம் என்று பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

இதனால் பிரான்ஸ் அதிகாரிகள் உடனடியாக விமானத்தை மீண்டும் பறக்க விடாமல் தடுத்து, இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து பிரான்ஸ் அதிகாரிகள் இந்திய தூதரகத்திற்குத் தகவல் கொடுத்தனர். இந்தியத் தூதரக அதிகாரிகள் அங்கு சென்று இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை செய்தனர்.

இது தொடா்பாக பயணிகளிடம் பிரான்ஸ் நீதிபதிகள் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினா். நீதிபதிகளின் விசாரணைக்கு மொழிபெயா்ப்பாளா்கள் உதவினர். பயணிகளில் சிலா் இந்தியிலும், தமிழிலும் பேசினா். பயணிகள் தங்கள் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினர்.

இந்த விசாரணையில் விமானத்தில் பயணித்த அனைவரும் உரிய அனுமதியுடன் பயணித்ததும், மனித கடத்தலில் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்தது. விமானம் மீண்டும் புறப்பட அனுமதி வழங்கி ஞாயிற்றுகிழமை பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகளில் 25 பேர் பிரான்ஸில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனர். மேலும், இருவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதையடுத்து, 276 பயணிகளுடன் விமானம் நிக்ராகுவா நாட்டிற்கு புறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கப்பட்ட விமானம் நிக்ராகுவா நாட்டிற்கு செல்லாது என்றும், விமானம் இந்தியாவுக்கு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 276 இந்தியர்களுடன் பிரான்ஸின் வட்ரே விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட விமானம் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்தியா வந்தடைந்தது. மும்பை வந்த பயணிகளுடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: airoplane
ShareTweetSendShare
Previous Post

பெண் ஊழியர்களுக்கு ‘எளிமையான வாழ்க்கையை’ உருவாக்க அரசு தொடர்ச்சியான முன்முயற்சிகளை எடுத்துள்ளது!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies