அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட அம்ரித் பாரத் இரயில் - தொடக்க விழா எப்போது?
Sep 9, 2025, 10:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட அம்ரித் பாரத் இரயில் – தொடக்க விழா எப்போது?

Web Desk by Web Desk
Dec 26, 2023, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன்னதாக, டிசம்பர் 30 ஆம் தேதி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கவுள்ளார்.

இந்தியாவில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து, இந்திய இரயில்வே புதிய பரிணாமத்தை அடைந்து வருகிறது. பயணிகளின் விரைந்த சேவையை கருத்தில் கொண்டு அதிவிரைவு இரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலைத் தொடர்ந்து, அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் மக்களுக்கான சேவையை தொடங்கவுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன்னதாக, டிசம்பர் 30 ஆம் தேதி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கவுள்ளார்.

இதற்கான நிகழ்ச்சிகளை மத்திய இரயில்வே அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. டெல்லியில் இருக்கும் இரயில் நிலையத்தில், அம்ரித் பாரத் இரயில் பெட்டிகளை மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் சிறப்பம்சங்களை கேட்டறிந்து அதிகாரிகளையும் பாராட்டினார்.

முதல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்து பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா வரை இயக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் விரைவில் பெங்களூருவில் உள்ள மால்டா வரை இயக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், புஷ் மற்றும் புல் எனப்படும் நுட்பத்திறன் கொண்ட அம்ரித் பாரத் இரயில் எஞ்சின் ஒன்று முன்னோக்கி இழுக்கும், இன்னொன்று பின்னால் இருந்து தள்ளும் என்பதால் இரயில் அதிவேகத்தில் பயணம் செய்யும். அதேப் போல வழியில் உள்ள பாதை, திருப்பம், பாலம் போன்றவையும் ரயிலின் வேகத்திற்கு ஏற்ப தாங்கும் வகையில் சீர்படுத்தப்பட்டுள்ளன.

இரயில் அதிவேகத்தில் பயணித்தாலும் குறைந்த அதிர்ச்சியை உணரப்படும் வகையில், பிரத்தியேக தொழில்நுட்பம் கொண்டு இரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்களும் இந்த இரயிலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரயிலில் 8 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் & 3 சிலீப்பர் பெட்டிகள், இரண்டு காவல் பெட்டிகள் என மொத்தமாக 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

சார்ஜிங் பாயிண்ட்கள், தொழில்நுட்ப வசதியுடன் கொண்ட கழிவறை என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் 1800 பயணிகள் இந்த இரயிலில் பயணம் செய்யலாம்.

அம்ரித் பாரத் இரயில் பெட்டிகள் அனைத்தும் சென்னையில் உள்ள ஐசிஎப் கோச் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இரண்டு அம்ரித் பாரத் இரயில்கள் மற்றும் ஐந்து வந்தே பாரத் இரயில்களை டிசம்பர் 30ஆம் தேதி பாரத பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.

அதன்படி, அயோத்தி முதல் ஆனந்த் விகார், புது டெல்லி முதல் வைஷ்ணவ தேவ் வரை, அமிர்தசரஸ் முதல் புது டெல்லி வரை, ஜல்னா முதல் மும்பை வரை, கோவை முதல் பெங்களூர் இடையே இரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Tags: PM ModiAmrit Bharat Express
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் மூன்று மாடி கட்டடத்தில் தீ விபத்து!

Next Post

திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி அல்ல! – அண்ணாமலை

Related News

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies