அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட அம்ரித் பாரத் இரயில் - தொடக்க விழா எப்போது?
Sep 13, 2026, 02:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட அம்ரித் பாரத் இரயில் – தொடக்க விழா எப்போது?

Murugesan M by Murugesan M
Dec 26, 2023, 11:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன்னதாக, டிசம்பர் 30 ஆம் தேதி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கவுள்ளார்.

இந்தியாவில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து, இந்திய இரயில்வே புதிய பரிணாமத்தை அடைந்து வருகிறது. பயணிகளின் விரைந்த சேவையை கருத்தில் கொண்டு அதிவிரைவு இரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலைத் தொடர்ந்து, அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் மக்களுக்கான சேவையை தொடங்கவுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன்னதாக, டிசம்பர் 30 ஆம் தேதி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கவுள்ளார்.

இதற்கான நிகழ்ச்சிகளை மத்திய இரயில்வே அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. டெல்லியில் இருக்கும் இரயில் நிலையத்தில், அம்ரித் பாரத் இரயில் பெட்டிகளை மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் சிறப்பம்சங்களை கேட்டறிந்து அதிகாரிகளையும் பாராட்டினார்.

முதல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்து பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா வரை இயக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் விரைவில் பெங்களூருவில் உள்ள மால்டா வரை இயக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், புஷ் மற்றும் புல் எனப்படும் நுட்பத்திறன் கொண்ட அம்ரித் பாரத் இரயில் எஞ்சின் ஒன்று முன்னோக்கி இழுக்கும், இன்னொன்று பின்னால் இருந்து தள்ளும் என்பதால் இரயில் அதிவேகத்தில் பயணம் செய்யும். அதேப் போல வழியில் உள்ள பாதை, திருப்பம், பாலம் போன்றவையும் ரயிலின் வேகத்திற்கு ஏற்ப தாங்கும் வகையில் சீர்படுத்தப்பட்டுள்ளன.

இரயில் அதிவேகத்தில் பயணித்தாலும் குறைந்த அதிர்ச்சியை உணரப்படும் வகையில், பிரத்தியேக தொழில்நுட்பம் கொண்டு இரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்களும் இந்த இரயிலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரயிலில் 8 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் & 3 சிலீப்பர் பெட்டிகள், இரண்டு காவல் பெட்டிகள் என மொத்தமாக 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

சார்ஜிங் பாயிண்ட்கள், தொழில்நுட்ப வசதியுடன் கொண்ட கழிவறை என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் 1800 பயணிகள் இந்த இரயிலில் பயணம் செய்யலாம்.

அம்ரித் பாரத் இரயில் பெட்டிகள் அனைத்தும் சென்னையில் உள்ள ஐசிஎப் கோச் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இரண்டு அம்ரித் பாரத் இரயில்கள் மற்றும் ஐந்து வந்தே பாரத் இரயில்களை டிசம்பர் 30ஆம் தேதி பாரத பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.

அதன்படி, அயோத்தி முதல் ஆனந்த் விகார், புது டெல்லி முதல் வைஷ்ணவ தேவ் வரை, அமிர்தசரஸ் முதல் புது டெல்லி வரை, ஜல்னா முதல் மும்பை வரை, கோவை முதல் பெங்களூர் இடையே இரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Tags: PM ModiAmrit Bharat Express
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் மூன்று மாடி கட்டடத்தில் தீ விபத்து!

Next Post

திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி அல்ல! – அண்ணாமலை

Related News

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies