மும்பை வந்தடைந்தது ட்ரோன் தாக்குதலுக்குள்ளான எம்.வி. கெம் புளூட்டோ கப்பல்!
Jan 14, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை வந்தடைந்தது ட்ரோன் தாக்குதலுக்குள்ளான எம்.வி. கெம் புளூட்டோ கப்பல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 26, 2023, 02:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த எம்.வி. கெம் புளூட்டோ கப்பல், போர்க் கப்பல் பாதுகாப்புடன் மும்பை துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது.

லைபீரியா நாட்டு கொடி பொருத்தப்பட்ட எம்.வி. கெம் புளூட்டோ வணிகக் கப்பல், சௌதி அரேபியாவின் அல் ஜுபைல் துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூரூ துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்தது.

கடந்த 23-ம் தேதி இரவு, போர்ப்பந்தரில் இருந்து 217 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, அக்கப்பல் மீது திடீரென ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கப்பல் தீப்பற்றிய நிலையில், உடனடியாக தீ அணைக்கப்பட்டது. மேலும், தாக்குதலில் யாருக்கும் காயமோ, சேதமே ஏற்படவில்லை.

அதேபோல, எம்.வி.சாய்பாபா என்ற கச்சா எண்ணெய் கப்பல் 25 இந்திய ஊழியர்களுடன் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. தெற்கு செங்கடல் பகுதியில் வந்து கொண்டிருந்த அக்கப்பல் மீதும் 23-ம் தேதி இரவு 10.30 மணியளவில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், நார்வே நாட்டின் எம்.வி. ப்ளாமனென் என்ற ரசாயன டேங்கர் கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள், ஈரானில் இருந்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் வரும் கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹௌதி தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான எம்.வி. கெம் புளூட்டோ கப்பல் 21 இந்தியர்கள் மற்றும் ஒரு வியாட்நாமிய பணியாளர்களுடன் மும்பை துறைமுகத்துக்கு வந்தடைந்தது.

இதுகுறித்து கப்பற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “புளூட்டோ கப்பல் வந்தடைந்ததைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் வெடிகுண்டு அழிப்புக் குழுவினர் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் தன்மை குறித்து முதற்கட்ட ஆய்வை நடத்தினர்.

தாக்குதல் நடத்தப்பட்ட பரப்பளவு, அங்கு கிடைத்த பொருட்கள் மூலம் ட்ரோன் தாக்குதல் குறித்து அறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், என்ன வகையான மற்றும் எவ்வளவு அளவு வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து அறிய தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு தேவைப்படும்.

வெடிகுண்டு அழிப்புக் குழுவின் ஆய்வைத் தொடர்ந்து, எம்.வி. கெம் புளூட்டோவை இயக்குவதற்காக மும்பையில் உள்ள அதன் பொறுப்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கப்பலில் இருந்து சரக்குகளை மற்றொரு கப்பல்களுக்கு மாற்றும் முன்பு பல்வேறு அமைப்புகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்” என்று தெரிவித்தனர்.

Tags: MV Chem PlutoReachesMumbai Port
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியா பேட்டிங்!

Next Post

ப்ரோ கபடி : ஹரியானா ஸ்டீலர்ஸ் அபார வெற்றி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies