மும்பை வந்தடைந்தது ட்ரோன் தாக்குதலுக்குள்ளான எம்.வி. கெம் புளூட்டோ கப்பல்!
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை வந்தடைந்தது ட்ரோன் தாக்குதலுக்குள்ளான எம்.வி. கெம் புளூட்டோ கப்பல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 26, 2023, 02:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த எம்.வி. கெம் புளூட்டோ கப்பல், போர்க் கப்பல் பாதுகாப்புடன் மும்பை துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது.

லைபீரியா நாட்டு கொடி பொருத்தப்பட்ட எம்.வி. கெம் புளூட்டோ வணிகக் கப்பல், சௌதி அரேபியாவின் அல் ஜுபைல் துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூரூ துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்தது.

கடந்த 23-ம் தேதி இரவு, போர்ப்பந்தரில் இருந்து 217 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, அக்கப்பல் மீது திடீரென ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கப்பல் தீப்பற்றிய நிலையில், உடனடியாக தீ அணைக்கப்பட்டது. மேலும், தாக்குதலில் யாருக்கும் காயமோ, சேதமே ஏற்படவில்லை.

அதேபோல, எம்.வி.சாய்பாபா என்ற கச்சா எண்ணெய் கப்பல் 25 இந்திய ஊழியர்களுடன் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. தெற்கு செங்கடல் பகுதியில் வந்து கொண்டிருந்த அக்கப்பல் மீதும் 23-ம் தேதி இரவு 10.30 மணியளவில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், நார்வே நாட்டின் எம்.வி. ப்ளாமனென் என்ற ரசாயன டேங்கர் கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள், ஈரானில் இருந்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் வரும் கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹௌதி தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான எம்.வி. கெம் புளூட்டோ கப்பல் 21 இந்தியர்கள் மற்றும் ஒரு வியாட்நாமிய பணியாளர்களுடன் மும்பை துறைமுகத்துக்கு வந்தடைந்தது.

இதுகுறித்து கப்பற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “புளூட்டோ கப்பல் வந்தடைந்ததைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் வெடிகுண்டு அழிப்புக் குழுவினர் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் தன்மை குறித்து முதற்கட்ட ஆய்வை நடத்தினர்.

தாக்குதல் நடத்தப்பட்ட பரப்பளவு, அங்கு கிடைத்த பொருட்கள் மூலம் ட்ரோன் தாக்குதல் குறித்து அறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், என்ன வகையான மற்றும் எவ்வளவு அளவு வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து அறிய தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு தேவைப்படும்.

வெடிகுண்டு அழிப்புக் குழுவின் ஆய்வைத் தொடர்ந்து, எம்.வி. கெம் புளூட்டோவை இயக்குவதற்காக மும்பையில் உள்ள அதன் பொறுப்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கப்பலில் இருந்து சரக்குகளை மற்றொரு கப்பல்களுக்கு மாற்றும் முன்பு பல்வேறு அமைப்புகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்” என்று தெரிவித்தனர்.

Tags: MV Chem PlutoReachesMumbai Port
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியா பேட்டிங்!

Next Post

ப்ரோ கபடி : ஹரியானா ஸ்டீலர்ஸ் அபார வெற்றி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies