சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சிறப்பு வந்தே பாரத் இரயிலை இயக்க தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்த இரயில் சென்னை எழும்பூரிலிருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், அதிகாலை 5.15 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்குப் புறப்பட்டு, இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இந்த சிறப்பு இரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த இரயிலை வாராந்திர சிறப்பு இரயிலாக இயக்க இரயில்வே நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இது சென்னை எழும்பூர் – நெல்லை இடையே இயக்கப்படும் சிறப்பு இரயிலின் நீடிப்பாக இயக்குவதா, தனி சிறப்பு இரயிலாக இயக்குவதா என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இரயில்வே நிர்வாகம் தரப்பிலிருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.