தாக்குதல் எதிரொலி: அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்கள் நிலை நிறுத்தம்!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாக்குதல் எதிரொலி: அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்கள் நிலை நிறுத்தம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 26, 2023, 03:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் மேற்கு அரபிக்கடல் எல்லைப் பகுதியில், வணிகக் கப்பல்கள் மீது நடந்த தாக்குதலின் எதிரொலியாக, இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிலை நிறுத்தி இருக்கிறது.

சௌதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு எம்.வி. கெம் புளூட்டோ என்கிற வணிகக் கப்பல் வந்துகொண்டிருந்தது. கடந்த 23-ம் தேதி, இந்தியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் வந்து கொண்டிருந்த இக்கப்பல் மீது, ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுகுறித்து இந்திய கடற்படைக்கு தகவல் கிடைக்கவே, இந்திய போர்க் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விரைந்து சென்றன. இதனிடையே, தாக்குதலில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டது. எனினும், கப்பலில் இருந்த பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதையடுத்து, போர்க் கப்பல் பாதுகாப்புடன், கச்சா எண்ணெய் கப்பல் மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது. அங்கு, எம்.வி. கெம் புளூட்டோ கப்பலில் இந்திய கடற்படையின் வெடிகுண்டு அழிப்பு குழு விரிவான ஆய்வு நடத்தியது. தொடர்ந்து, கப்பலில் இருந்து சரக்குகள் மற்றொரு கப்பலுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், அரபிக்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும்நிலையில், கண்காணிப்புக்காக P-8I நீண்ட தூர ரோந்து விமானம், ஐ.என்.எஸ். மோர்முகாவ், ஐ.என்.எஸ். கொச்சி மற்றும் ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய 3 போர்க் கப்பல்களை அரபிக் கடலில் பாதுகாப்புக்காக நிலை நிறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து கப்பற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தாக்குல் சம்பவங்கள் ஏற்படுத்தி இருக்கும் கவலை காரணமாக, வழிகாட்டுதல்களுக்காக ஐ.என்.எஸ். மோர்முகாவ், ஐ.என்.எஸ். கொச்சி மற்றும் ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய 3 போர்க் கப்பல்கள் அரபிக் கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.

Tags: Arabian seaIndia deploys3 War Ships
Share
Tweet
SendShare
Previous Post

ஐஎன்எஸ் இம்பால் மிகவும் மேம்பட்ட, ஆற்றல் வாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றாகும்!

Next Post

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு இரயில்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies