தாக்குதல் எதிரொலி: அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்கள் நிலை நிறுத்தம்!
Jul 29, 2026, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாக்குதல் எதிரொலி: அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்கள் நிலை நிறுத்தம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 26, 2023, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் மேற்கு அரபிக்கடல் எல்லைப் பகுதியில், வணிகக் கப்பல்கள் மீது நடந்த தாக்குதலின் எதிரொலியாக, இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிலை நிறுத்தி இருக்கிறது.

சௌதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு எம்.வி. கெம் புளூட்டோ என்கிற வணிகக் கப்பல் வந்துகொண்டிருந்தது. கடந்த 23-ம் தேதி, இந்தியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் வந்து கொண்டிருந்த இக்கப்பல் மீது, ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுகுறித்து இந்திய கடற்படைக்கு தகவல் கிடைக்கவே, இந்திய போர்க் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விரைந்து சென்றன. இதனிடையே, தாக்குதலில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டது. எனினும், கப்பலில் இருந்த பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதையடுத்து, போர்க் கப்பல் பாதுகாப்புடன், கச்சா எண்ணெய் கப்பல் மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது. அங்கு, எம்.வி. கெம் புளூட்டோ கப்பலில் இந்திய கடற்படையின் வெடிகுண்டு அழிப்பு குழு விரிவான ஆய்வு நடத்தியது. தொடர்ந்து, கப்பலில் இருந்து சரக்குகள் மற்றொரு கப்பலுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், அரபிக்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும்நிலையில், கண்காணிப்புக்காக P-8I நீண்ட தூர ரோந்து விமானம், ஐ.என்.எஸ். மோர்முகாவ், ஐ.என்.எஸ். கொச்சி மற்றும் ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய 3 போர்க் கப்பல்களை அரபிக் கடலில் பாதுகாப்புக்காக நிலை நிறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து கப்பற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தாக்குல் சம்பவங்கள் ஏற்படுத்தி இருக்கும் கவலை காரணமாக, வழிகாட்டுதல்களுக்காக ஐ.என்.எஸ். மோர்முகாவ், ஐ.என்.எஸ். கொச்சி மற்றும் ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய 3 போர்க் கப்பல்கள் அரபிக் கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.

Tags: Arabian seaIndia deploys3 War Ships
ShareTweetSendShare
Previous Post

ஐஎன்எஸ் இம்பால் மிகவும் மேம்பட்ட, ஆற்றல் வாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றாகும்!

Next Post

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு இரயில்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies