இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியா 245 ரன்கள்!
Mar 15, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியா 245 ரன்கள்!

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 245 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதில் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் 2 ரன்களுக்கும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 3 பௌண்டரீஸ், 1 சிக்சர் என 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலி 5 பௌண்டரீஸ் அடித்து 38 ரன்களை குவித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி 105 பந்துகளில் 7 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

அஸ்வின் 8 ரன்களிலும், ஷர்துல் தாக்குர் 28 ரன்களிலும், ஜஸ்பிரீத் பும்ரா 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, முகமது சிராஜ் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியாக முதல் நாள் முடிவில் இந்தியா 8 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்களுடன் களத்தில் இருந்தது.

முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா அணியில் ககிசோ ரபாடா 5 விக்கெட்களையும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்களையும், மார்கோ ஜான்சன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கே.எல்.ராகுல் மற்றும் முகமது சிராஜ் காலத்தில் இருந்தனர்.

போட்டி தொடங்கிய சற்று நேரத்திலேயே முகமது சிராஜ் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இறுதியாக கே.எல்.ராகுல் 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸ் முதல் பேட்டிங் முடிவில் இந்திய அணி 245 ரன்களை எடுத்துள்ளது.

இரண்டாம் நாளில் தென் ஆப்பிரிக்காவின் நந்த்ரே பர்கர் 1 விக்கெட்டும், ஜெரால்ட் கோட்ஸி 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணியின் தொடங்க வீரர்க களமிறங்கிய ஐடன் மார்க்ராம் முகமது சிராஜ் பந்தில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போது தென் ஆப்பிரிக்கா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்களுடன் விளையாடிவருகிறது.

Tags: india vs southafricatest match
ShareTweetSendShare
Previous Post

2024-ல் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள்-ன் புதிய வரவுகள்!

Next Post

ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies