ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!
Sep 12, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 03:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யா சென்றிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று மாலை அந்நாட்டு பிரதமர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்துப் பேசுகிறார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த 25-ம் தேதி ரஷ்யாவுக்குச் சென்றார். மாஸ்கோவில் அந்நாட்டின் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவை சந்தித்துப் பேசினார். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து, ஜெய்சங்கர் இன்று மாலை ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்து பேசுகிறார். இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாலை மாஸ்கோவில் ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்து பேசுகிறார்.

அப்போது, போக்குவரத்து, வங்கி மற்றும் நிதிச் சங்கிலிகள், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, உக்ரைன், ஆப்கானிஸ்தான் நிலைமை மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்த உறவு வலிமையிலிருந்து வலிமைக்கு மட்டுமே வளரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த சில ஆண்டுகளில் கூட, ஆசியாவில் ரஷ்யா அதிகம் கவனம் செலுத்துவதை நான் காண்கிறேன். இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் எங்களது வர்த்தகம் மிகவும் வளர்ச்சியடைந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தியதற்காக இந்திய சமூகத்தை பாராட்டிய ஜெய்சங்கர், சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை கடந்த 75 ஆண்டுகளின் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

தவிர, நமது சிவில் சமூகங்களுக்கிடையே நெருங்கிய உறவுகளை மேம்படுத்துவதில் ரஷ்யாவின் பங்கு விலைமதிப்பற்றது. ஆத்மநிர்பர் பாரதம் ரஷ்யாவுடன் உறவுகளை ஆழப்படுத்தும்” என்று கூறியிருக்கிறார். எனினும், அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Tags: russiaJaishankarexternal affairs minister
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியா 245 ரன்கள்!

Next Post

கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும்! அமலி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies