ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!
Jul 28, 2026, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா சென்றிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று மாலை அந்நாட்டு பிரதமர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்துப் பேசுகிறார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த 25-ம் தேதி ரஷ்யாவுக்குச் சென்றார். மாஸ்கோவில் அந்நாட்டின் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவை சந்தித்துப் பேசினார். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து, ஜெய்சங்கர் இன்று மாலை ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்து பேசுகிறார். இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாலை மாஸ்கோவில் ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்து பேசுகிறார்.

அப்போது, போக்குவரத்து, வங்கி மற்றும் நிதிச் சங்கிலிகள், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, உக்ரைன், ஆப்கானிஸ்தான் நிலைமை மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்த உறவு வலிமையிலிருந்து வலிமைக்கு மட்டுமே வளரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த சில ஆண்டுகளில் கூட, ஆசியாவில் ரஷ்யா அதிகம் கவனம் செலுத்துவதை நான் காண்கிறேன். இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் எங்களது வர்த்தகம் மிகவும் வளர்ச்சியடைந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தியதற்காக இந்திய சமூகத்தை பாராட்டிய ஜெய்சங்கர், சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை கடந்த 75 ஆண்டுகளின் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

தவிர, நமது சிவில் சமூகங்களுக்கிடையே நெருங்கிய உறவுகளை மேம்படுத்துவதில் ரஷ்யாவின் பங்கு விலைமதிப்பற்றது. ஆத்மநிர்பர் பாரதம் ரஷ்யாவுடன் உறவுகளை ஆழப்படுத்தும்” என்று கூறியிருக்கிறார். எனினும், அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Tags: russiaJaishankarexternal affairs minister
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியா 245 ரன்கள்!

Next Post

கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும்! அமலி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies