கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும்! அமலி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
Jun 24, 2026, 05:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும்! அமலி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுக்காவில் உள்ள பாபநாசம் கோவிலுக்குச் சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது.

இதில், அமலி கான்வென்ட் முதலில் 44 ஏக்கர் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. அப்போது, மனுதாரருக்கும், கோவில் நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால், கோவில் நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை அமலி நிறுவனம் மறுத்துவிட்டது.

இது தொடர்பான வழக்கு அம்பாசமுத்திரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஆனால், கோவிலின் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, 1985 -ல் தென்காசியில் உள்ள சப் -கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதில், இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டது. இதில், 11 ஏக்கர் நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு மீதி நிலத்தை அமலி கான்வென்ட் திருப்பி அளித்தது.

மேலும், நிலத்தின் வாடகையாக ஆண்டுக்கு 2,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதனிடையே, விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்டப்பட்டதால் அமலி நிறுவனத்தை வெளியேற வேண்டும் என கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அளித்தது. ஆனால், இந்த நோட்டீசை அமலி நிறுவனம் புறக்கணித்துவிட்டது.

மேலும், இந்து சயம அறநிலையத்துறை சட்டத்தின்படி, கோவில் நிலத்தை குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகை நீட்டிப்பு செய்யாமல் அலட்சியம் செய்தது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்றது.

இதில், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்கீழ் ஆக்கிரமிப்பு மற்றும் வெளியேற்றம் தொடர்பான விவகாரங்களில் இணை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.

அமலி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அமலி கான்வென்ட் ஆகியவை தாக்கல் செய்த மூன்று ரிட் மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

கோவில் சொத்தை அமலி கான்வென்ட் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

மேலும், கோவில் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததை நியாயப்படுத்த மனுதாரர் குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தியதாகவும் நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

எனவே, வரும் 2024- மார்ச் மாதம் 31-க்குள் கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும் என அமலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

Tags: Madurai high court
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!

Next Post

‘சதம்’ அடித்து சாதனை படைத்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்!

Related News

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதம் – அதிமுக கவுன்சிலர்கள் மீது பேப்பர் வீச்சு!

பேசினாலும் பிரச்சினை, பேசாம இருந்தாலும் பிரச்சினை – நடிகர் ரஜினிகாந்த் ஓப்ன் டாக்!

தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன் – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் புகழாரம்

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

நிறைமாத கர்ப்பிணியின் இருக்கைக்கு சென்று பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் – பிரதமர் மோடி

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies