கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும்! அமலி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
Aug 9, 2026, 09:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும்! அமலி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 04:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுக்காவில் உள்ள பாபநாசம் கோவிலுக்குச் சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது.

இதில், அமலி கான்வென்ட் முதலில் 44 ஏக்கர் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. அப்போது, மனுதாரருக்கும், கோவில் நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால், கோவில் நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை அமலி நிறுவனம் மறுத்துவிட்டது.

இது தொடர்பான வழக்கு அம்பாசமுத்திரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஆனால், கோவிலின் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, 1985 -ல் தென்காசியில் உள்ள சப் -கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதில், இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டது. இதில், 11 ஏக்கர் நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு மீதி நிலத்தை அமலி கான்வென்ட் திருப்பி அளித்தது.

மேலும், நிலத்தின் வாடகையாக ஆண்டுக்கு 2,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதனிடையே, விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்டப்பட்டதால் அமலி நிறுவனத்தை வெளியேற வேண்டும் என கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அளித்தது. ஆனால், இந்த நோட்டீசை அமலி நிறுவனம் புறக்கணித்துவிட்டது.

மேலும், இந்து சயம அறநிலையத்துறை சட்டத்தின்படி, கோவில் நிலத்தை குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகை நீட்டிப்பு செய்யாமல் அலட்சியம் செய்தது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்றது.

இதில், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்கீழ் ஆக்கிரமிப்பு மற்றும் வெளியேற்றம் தொடர்பான விவகாரங்களில் இணை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.

அமலி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அமலி கான்வென்ட் ஆகியவை தாக்கல் செய்த மூன்று ரிட் மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

கோவில் சொத்தை அமலி கான்வென்ட் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

மேலும், கோவில் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததை நியாயப்படுத்த மனுதாரர் குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தியதாகவும் நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

எனவே, வரும் 2024- மார்ச் மாதம் 31-க்குள் கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும் என அமலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

Tags: Madurai high court
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!

Next Post

‘சதம்’ அடித்து சாதனை படைத்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்!

Related News

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆடி அமாவாசை – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவியும் பக்தர்கள்!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

உயர்ரக போதை பொருள் புழக்கம் – பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை!

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

தவெகவில் 27 மாவட்ட செயலாளர்கள் நியமனம் – விஜயபாஸ்கர்களுக்கும் பதவி!

புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies