மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது என மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மருந்து நிறுவனங்களின் குறிப்பிட்ட மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதற்காக, சில மருத்துவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகள், பண உதவி மற்றும் வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, மருத்துவர்களுக்கான நடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருந்து நிறுவனங்களிடம் இருந்து இதுபோன்ற சலுகைகளை பெறுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மாநில மருத்துவ கவுன்சில்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
















