கேரள மாநிலம் ஆலப்புழாவில், அரசு வாகனம் வரத் தாமதமானதால் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆட்டோவில் பயணித்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு ஜவுளிக் கடையின் திறப்பு விழாவில் மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி பங்கேற்றார்.
விழா முடிந்த பிறகு அவர் வெளியே வந்தபோது, அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ அரசு வாகனம் அங்கு வரத் தாமதமானது.
அரசு காரின் வருகைக்காகக் காத்திருக்க விரும்பாத அமைச்சர், உடனடியாக அங்கிருந்த ஒரு ஆட்டோ ரிக்ஷாவை கைக்காட்டி நிறுத்தினார்.
அவர் ஆட்டோவில் ஏறிச் சென்றபோது, அவரது பாதுகாப்புக்காக வந்த இரண்டு போலீஸ் பாதுகாப்பு வாகனங்களும் அந்த ஆட்டோவிற்கு பின்னால் சேவித்துச் சென்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
















