அரசுமுறைப் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை சென்றார்.
அங்கு அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று மனமுருக வழிபட்டார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கோயிலில் இருந்து வெளியே வந்த அமித் ஷாவைக் கண்டு பாரத் மாதா கி ஜே என பாஜக தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர். அப்போது பதிலுக்கு தொண்டர்களைக் கண்டு அமித் ஷா கையசைத்தார்.
இதையடுத்து, ரமண மகரிஷி ஆசிரமத்திற்கு சென்ற அமித்ஷா, அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் தனது காரில் சாலை மார்க்கமாக புதுச்சேரி சென்றடைந்தார்.
















