அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் போர் முடிவுக்கான ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது. இதனால் ஹோர்முஸ் ஜலசந்தியை வணிக கப்பல்கள் எளிதாக கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது ஈரான் புதிய நிபந்தனையை விதித்துள்ளது. அதன்படி, அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக்கூடாது என்றும், ஈரானுடனும் அப்பிராந்தியத்தில் உள்ள அதன் ஆயுதமேந்திய கூட்டாளிகளுடனும் நடத்தி வரும் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என்றும், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















