மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 50 லட்சம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்!
Jan 14, 2026, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 50 லட்சம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 50 லட்சம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையின் செயலாளர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையின் செயலாளர் வி.ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “26.12.2023 அன்று 16 ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் மற்றும் 50 ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கங்களைச் சேர்ந்த 290 நோடல் அதிகாரிகளுடன் நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் பிரச்சாரம் 2.0-ன் முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலச் சங்கங்களின் சிறப்பான சேவைகளைப் பாராட்டியதோடு, ஓய்வூதியம் பெறுபவர்களை அணுகி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்களை, குறிப்பாக முக அங்கீகார நுட்பம் மூலம் சமர்பிக்க உதவினார்.

அதேபோல, வங்கி அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலச் சங்கங்கள் படுக்கையில் உள்ள அல்லது உடல் நலம் குன்றிய ஓய்வூதியதாரர்களின் வீடுகள் அல்லது மருத்துவமனைகளுக்குச் சென்று அவர்களின் DLC-க்களை உருவாக்குவது, அந்த ஓய்வூதியதாரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றார்.

மேலும், டி.எல்.சி. பிரச்சாரம் 2.0-ன் கீழ் டிசம்பர் 2023 வரை 1.29 கோடி ஓய்வூதியதாரர்கள் டி.எல்.சி.க்களை சமர்ப்பித்திருக்கிறார்கள். இவர்களில் 41 லட்சத்திற்கும் அதிகமானோர் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்.

மேலும், இப்பிரச்சாரத்தின் விளைவாக, முக அங்கீகார நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டி.எல்.சி.க்களின் எண்ணிக்கை 21.34 லட்சத்திற்கும் அதிகமாகவும், பயோ மெட்ரிக்ஸைப் பயன்படுத்தி 97.13 லட்சமாகவும், ஐரிஸை பயன்படுத்தி 10.95 லட்சமாகவும் உள்ளது.

இதில், மத்திய அரசு ஓய்வூதியர்கள் 10.43 லட்சம் பேர் முக அங்கீகாரம் மூலமாகவும், 28.90 லட்சம் பேர் பயோ மெட்ரிக் மூலமாகவும், 2.33 லட்சம் பேர் ஐரிஸ் மூலமாகவும் வழங்கி உள்ளனர். DLC-களின் வயது வாரியான தலைமுறையின் பகுப்பாய்வு, 90 வயதுக்கு மேற்பட்ட 27,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், 80 முதல் 90 வயதுக்குட்பட்ட 2.84 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களும் டிஜிட்டல் முறையை பயன்படுத்தி உள்ளனர்.

திணைக் களத்தால் உருவாக்கப்பட்ட பிரத்யேக DLC போர்ட்டல் படி, DLC உற்பத்திக்கான 5 முன்னணி மாநிலங்கள் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழகம் மற்றும் கேரளா ஆகியவை முறையே 5.48 லட்சம், 5.03 லட்சம், 2.81 லட்சம், 2.78 லட்சம் மற்றும் 2.44 லட்சம் DLC-க்களை உருவாக்கி உள்ளன.

8.22 லட்சம், 2.59 லட்சம், 0.92 லட்சம், 0.74 லட்சம் மற்றும் 0.69 லட்சம் டி.எல்.சி.-க்கும் அதிகமான ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை டி.எல்.சி. உற்பத்திக்கான முன்னணி 5 வங்கிகளாகும்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 50 லட்சம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்களை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: 50 lakhDigital Life CertificatesGovernmenttarget
ShareTweetSendShare
Previous Post

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

கே.எல்.ராகுலை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!

Related News

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies