கோயம்புத்தூர் – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது.
தொழில் நகரங்களான கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் இயக்கப்பட வேண்டும் என தொழில் அமைப்புகள் மற்றும் பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தெற்கு இரயில்வே சாா்பில் கோவை – பெங்களூரு இடையே டிசம்பா் 30-ஆம் தேதி முதல் வந்தே பாரத் இரயில் இயக்கப்பட உள்ளது. இந்த இரயிலை, பாரத பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாக கொடியசைத்து தொடங்கிவைக்க உள்ளாா்.
இந்நிலையில், கோவை இரயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூருக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோவையில் இருந்து 8 பெட்டிகளுடன் புறப்பட்ட வந்தே பாரத் இரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு காலை 11.30 மணியளவில் சென்றடைந்தது.
பெங்களூருவில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் இரயில் கோவைக்கு இரவு 8 மணியளவில் வந்தடைந்தது.