பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: நவாஸ் ஷெரீப் வேட்புமனு தாக்கல்!
Jun 15, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: நவாஸ் ஷெரீப் வேட்புமனு தாக்கல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். இவர், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும் இருந்தார். நவாஸ் ஷெரீப் மீது கடந்த 2018-ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கில் நவாஸுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப் லாகூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற அனுமதியுடன் மேல் சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்றார். இதன் பிறகு, பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆட்சி நடந்தது.

இதனால், நவாஸ் ஷெரீப் நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கி விட்டார். இதன் பிறகு, இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்து நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சி வந்தது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப் கடந்த அக்டோபர் மாதம் நாடு திரும்பினார்.

இதற்கிடையே, ஊழல் வழக்குகளில் இருந்து நவாஸ் ஷெரீப் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, 2024 பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட நவாஸ் ஷெரீப் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த வேட்பு மனுவை அந்நாட்டு தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இது குறித்து நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞர் அம்ஜத் பர்வேஷ் கூறுகையில், “ஊழல் வழக்குகளில் இருந்து நவாஸ் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட தகுதி நீக்கம் முடிவுக்கு வந்து விட்டது. ஆகவே, அவர் லாகூர் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆட்சேபனையுமின்றி மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன” என்றார்.

Tags: pakistannominationNawas Sherif
ShareTweetSendShare
Previous Post

ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்! – சிதம்பரத்தில் குவிந்த பக்தர்கள்

Next Post

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சோதனை ஓட்டம்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies