பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: நவாஸ் ஷெரீப் வேட்புமனு தாக்கல்!
Apr 29, 2026, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: நவாஸ் ஷெரீப் வேட்புமனு தாக்கல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். இவர், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும் இருந்தார். நவாஸ் ஷெரீப் மீது கடந்த 2018-ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கில் நவாஸுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப் லாகூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற அனுமதியுடன் மேல் சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்றார். இதன் பிறகு, பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆட்சி நடந்தது.

இதனால், நவாஸ் ஷெரீப் நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கி விட்டார். இதன் பிறகு, இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்து நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சி வந்தது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப் கடந்த அக்டோபர் மாதம் நாடு திரும்பினார்.

இதற்கிடையே, ஊழல் வழக்குகளில் இருந்து நவாஸ் ஷெரீப் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, 2024 பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட நவாஸ் ஷெரீப் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த வேட்பு மனுவை அந்நாட்டு தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இது குறித்து நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞர் அம்ஜத் பர்வேஷ் கூறுகையில், “ஊழல் வழக்குகளில் இருந்து நவாஸ் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட தகுதி நீக்கம் முடிவுக்கு வந்து விட்டது. ஆகவே, அவர் லாகூர் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆட்சேபனையுமின்றி மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன” என்றார்.

Tags: pakistannominationNawas Sherif
ShareTweetSendShare
Previous Post

ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்! – சிதம்பரத்தில் குவிந்த பக்தர்கள்

Next Post

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் இரயில் சோதனை ஓட்டம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies