விஜயகாந்த் பூதவுடலுக்கு பிரதமர் மோடி சார்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தீவுத் திடலில் விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இது குறித்த அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,
தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் பூதவுடலுக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின்
சார்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தி வணங்கினார்.
தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூதவுடலுக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் சார்பாக, மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள் அஞ்சலி செலுத்தி வணங்கினார்.
மேலும், தேமுதிக பொதுச்செயலாளர் சகோதரி திருமதி பிரேமலதா… pic.twitter.com/dlyIrhMeG7
— K.Annamalai (@annamalai_k) December 29, 2023
மேலும், தேமுதிக பொதுச்செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடமும் அவரது குடும்பத்தினரிடமும், நிதியமைச்சர் அவர்கள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின்
சார்பாக இரங்கல் தெரிவித்து, மனதைரியத்துடன் இருக்கும்படி ஆறுதல் கூறினார்.