தமிழர்களை பெருமைப்படுத்தும் சிறப்பு அஞ்சல் தலையை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை வெளியிடுகிறார்!
Jan 14, 2026, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழர்களை பெருமைப்படுத்தும் சிறப்பு அஞ்சல் தலையை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை வெளியிடுகிறார்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2023, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழர்களையும், தமிழ் மரபுகளையும், இலங்கை வாழ் இந்திய குடிமக்களையும், பெருமைப்படுத்தும் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா நாளை நடை பெறவுள்ளது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையின் மலையகப் பகுதிகளின், தேயிலைக் காடுகளிலும், மற்ற கடுமையான பகுதிகளிலும், வேலை செய்வதற்காக தமிழகத்திலிருந்து, ஏராளமான மக்களை இலங்கைக்கு அழைத்துச் சென்று வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்திலே குடியமர்த்தினார்கள்.

பாரதத்திலிருந்து புலம் பெயர்ந்து இலங்கைக்குச் சென்ற, நம் தமிழ் வம்சாவழியினர், கடந்த இருநூறு ஆண்டுகளாக, கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கைவிடாமல், தொடர்ந்து பின்பற்றி அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.

இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த, இந்தக் குடிப்பெயர்ச்சியை நினைவு கூறும் வகையில், அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பெருங்குடி மக்களை, போற்றும் வகையில், ஒரு நினைவு சிறப்பு அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிடுகிறது.

உலர்ந்து போகாமல் உறவுகளை ஈரப்படுத்தும், இடப்பெயர்வைப் போற்றும், இதுபோன்ற நிகழ்வு, இந்தியா உள்ளிட்ட உலகின் எந்த நாட்டிலும் இதுவரை நடைபெற்றது இல்லை.

நாளை புது டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, நினைவு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட இருக்கிறார்கள்.

அப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும், இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தின் ஆளுநர், மேதகு செந்தில் தொண்டமான் அவர்கள் அஞ்சல் தலையை பெற்றுக் கொள்கிறார்கள்.

தமிழர்களையும், தமிழ் மரபுகளையும், இலங்கை வாழ் இந்திய குடிமக்களையும், பெருமைப்படுத்தும் இந்த அரிய விழாவிலே பாஜகவின் தமிழ்மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அவர்கள் வரவேற்புரை நல்க இருக்கிறார்.

இவ்விழாவிலே மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவர்கள், விஜய் சௌத்தேவாலே அவர்கள், பொன்ராதாகிருஷ்ணன், H.ராஜா, திரு வி பி துரைசாமி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

விழாவின் நிறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணியின் தலைவர்  வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ நன்றியுரை வழங்குகிறார்.

பாரதப் பிரதமரின், பல்வேறு நலத்திட்டங்களால் அங்குள்ள, தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கிறது. பாரதமும், இலங்கையும் உணர்வுகளாலும், உறவுகளாலும் ஒன்றிணையும் இது போன்ற நிகழ்வுகள் வருங்கால சமுதாயத்தை வளர்க்க உதவும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjpbjp k annamalaibjp nadda
ShareTweetSendShare
Previous Post

நிரந்தர போர் நிறுத்தம் செய்தால் மட்டுமே பிணைக் கைதிகள் விடுதலை!

Next Post

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: 7 நாள் அட்டவணை வெளியீடு!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies