"Alt News" முகமது ஜுபைர் மீது வழக்குப் பதிவு!
Mar 15, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“Alt News” முகமது ஜுபைர் மீது வழக்குப் பதிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 30, 2023, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உண்மை கண்டறிவதாகக் கூறி, போலிச் செய்தி பரப்பியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

Alt News என்கிற பெயரில் உண்மை கண்டறியும் இணையதள செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இணை நிறுவனர் முகமது ஜுபைர். இவர், தன்னைத் தானே உண்மை கண்டறிபவர் என்று கூறிக்கொண்டு, போலியான செய்திகளை பரப்பி வருவதாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உண்டு.

காரணம், அச்செய்திகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும், பா.ஜ.க. அரசுக்கு எதிரானதாகவும் இருக்கும். அதாவது, இஸ்லாமியர்களால் இந்துக்கள் பாதிக்கப்பட்டாலும், இந்துக்களால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டாலும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே இவரது உண்மை கண்டறியும் பதிவு இருக்கும்.

அப்படித்தான், சி.ஏ.ஏ. தொடர்பாக டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின்போது இந்துக்கள்தான் கலவரத்தை தூண்டியதாக தனது இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டதோடு, தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க.வின் நுபுர் ஷர்மா, நபிகள் நாயகத்தைப் பற்றி பேசியதை மட்டும் வெட்டி ஒட்டி, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியவர் இவர்தான்.

இந்த விவகாரத்தில் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தவிர, முகமது ஜுபைர் மீது வேறு சில வழக்குகளும் உள்ளன. தனது இணையதள விரிவாக்கத்துக்காக இவர் வெளிநாடுகளில் இருக்கும் நபர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உண்டு.

இந்த நிலையில்தான், முகமது ஜுபைர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ‘கௌரக்ஷா பஜ்ரங் படை’யின் தலைவர் பிட்டு பஜ்ரங்கி. இவரது சகோதரர் மகேஷ் பஞ்சால்.

இவர் கடந்த 13-ம் தேதி தனது கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சிலர் மகேஷ் பஞ்சாலை கடுமையாகத் தாக்கியதோடு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மகேஷ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நிலைமை இப்படி இருக்க, மகேஷ் பஞ்சால் தவறுதலாக நெருப்பில் விழுத்து தீக்காயமடைந்ததாகவும், அவரைத் தாக்கியதற்கான எந்த ஆதாரமும், தடயமும் இல்லை என்று ஃபரிதாபாத் போலீஸார் கூறியதாகவும் போலிச் செய்தியை பரப்பி இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த பிட்டு பஜ்ரங்கி, ஃபரிதாபாத் போலீஸில் முகமது ஜுபைர் மீது புகார் அளித்திருக்கிறார். அப்புகாரில்,  முகமது ஜுபைர் ஒரு அடிப்படைவாதி மற்றும் தீவிர வகுப்புவாதி. போலி செய்தித் தொழிற்சாலை நடத்துகிறார். ஆகவே, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றுவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிக் கொல்லவும் முகமது ஜுபைர் திட்டமிடப்பட்ட சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் கூறியிருக்கும் பிட்டு பஜ்ரங்கி, ஏற்கெனவே இவர் வெளியிட்ட போலிச் செய்திகளையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இதுகுறித்து ஃபரீதாபாத் போலீஸார் முகமது ஜுபைர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

Tags: hariyanaMohamed ZubairALT news
ShareTweetSendShare
Previous Post

”அம்ரித் பாரத்” ரயில்! – நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்!

Next Post

ஆம் ஆத்மி கோரிக்கையை நிராகரித்த மாநிலங்களவை தலைவர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies