"Alt News" முகமது ஜுபைர் மீது வழக்குப் பதிவு!
Jul 23, 2025, 08:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“Alt News” முகமது ஜுபைர் மீது வழக்குப் பதிவு!

Web Desk by Web Desk
Dec 30, 2023, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உண்மை கண்டறிவதாகக் கூறி, போலிச் செய்தி பரப்பியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

Alt News என்கிற பெயரில் உண்மை கண்டறியும் இணையதள செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இணை நிறுவனர் முகமது ஜுபைர். இவர், தன்னைத் தானே உண்மை கண்டறிபவர் என்று கூறிக்கொண்டு, போலியான செய்திகளை பரப்பி வருவதாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உண்டு.

காரணம், அச்செய்திகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும், பா.ஜ.க. அரசுக்கு எதிரானதாகவும் இருக்கும். அதாவது, இஸ்லாமியர்களால் இந்துக்கள் பாதிக்கப்பட்டாலும், இந்துக்களால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டாலும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே இவரது உண்மை கண்டறியும் பதிவு இருக்கும்.

அப்படித்தான், சி.ஏ.ஏ. தொடர்பாக டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின்போது இந்துக்கள்தான் கலவரத்தை தூண்டியதாக தனது இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டதோடு, தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க.வின் நுபுர் ஷர்மா, நபிகள் நாயகத்தைப் பற்றி பேசியதை மட்டும் வெட்டி ஒட்டி, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியவர் இவர்தான்.

இந்த விவகாரத்தில் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தவிர, முகமது ஜுபைர் மீது வேறு சில வழக்குகளும் உள்ளன. தனது இணையதள விரிவாக்கத்துக்காக இவர் வெளிநாடுகளில் இருக்கும் நபர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உண்டு.

இந்த நிலையில்தான், முகமது ஜுபைர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ‘கௌரக்ஷா பஜ்ரங் படை’யின் தலைவர் பிட்டு பஜ்ரங்கி. இவரது சகோதரர் மகேஷ் பஞ்சால்.

இவர் கடந்த 13-ம் தேதி தனது கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சிலர் மகேஷ் பஞ்சாலை கடுமையாகத் தாக்கியதோடு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மகேஷ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நிலைமை இப்படி இருக்க, மகேஷ் பஞ்சால் தவறுதலாக நெருப்பில் விழுத்து தீக்காயமடைந்ததாகவும், அவரைத் தாக்கியதற்கான எந்த ஆதாரமும், தடயமும் இல்லை என்று ஃபரிதாபாத் போலீஸார் கூறியதாகவும் போலிச் செய்தியை பரப்பி இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த பிட்டு பஜ்ரங்கி, ஃபரிதாபாத் போலீஸில் முகமது ஜுபைர் மீது புகார் அளித்திருக்கிறார். அப்புகாரில்,  முகமது ஜுபைர் ஒரு அடிப்படைவாதி மற்றும் தீவிர வகுப்புவாதி. போலி செய்தித் தொழிற்சாலை நடத்துகிறார். ஆகவே, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றுவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிக் கொல்லவும் முகமது ஜுபைர் திட்டமிடப்பட்ட சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் கூறியிருக்கும் பிட்டு பஜ்ரங்கி, ஏற்கெனவே இவர் வெளியிட்ட போலிச் செய்திகளையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இதுகுறித்து ஃபரீதாபாத் போலீஸார் முகமது ஜுபைர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

Tags: hariyanaMohamed ZubairALT news
ShareTweetSendShare
Previous Post

”அம்ரித் பாரத்” ரயில்! – நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்!

Next Post

ஆம் ஆத்மி கோரிக்கையை நிராகரித்த மாநிலங்களவை தலைவர்!

Related News

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies