"Alt News" முகமது ஜுபைர் மீது வழக்குப் பதிவு!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“Alt News” முகமது ஜுபைர் மீது வழக்குப் பதிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 30, 2023, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உண்மை கண்டறிவதாகக் கூறி, போலிச் செய்தி பரப்பியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

Alt News என்கிற பெயரில் உண்மை கண்டறியும் இணையதள செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இணை நிறுவனர் முகமது ஜுபைர். இவர், தன்னைத் தானே உண்மை கண்டறிபவர் என்று கூறிக்கொண்டு, போலியான செய்திகளை பரப்பி வருவதாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உண்டு.

காரணம், அச்செய்திகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும், பா.ஜ.க. அரசுக்கு எதிரானதாகவும் இருக்கும். அதாவது, இஸ்லாமியர்களால் இந்துக்கள் பாதிக்கப்பட்டாலும், இந்துக்களால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டாலும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே இவரது உண்மை கண்டறியும் பதிவு இருக்கும்.

அப்படித்தான், சி.ஏ.ஏ. தொடர்பாக டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின்போது இந்துக்கள்தான் கலவரத்தை தூண்டியதாக தனது இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டதோடு, தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க.வின் நுபுர் ஷர்மா, நபிகள் நாயகத்தைப் பற்றி பேசியதை மட்டும் வெட்டி ஒட்டி, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியவர் இவர்தான்.

இந்த விவகாரத்தில் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தவிர, முகமது ஜுபைர் மீது வேறு சில வழக்குகளும் உள்ளன. தனது இணையதள விரிவாக்கத்துக்காக இவர் வெளிநாடுகளில் இருக்கும் நபர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உண்டு.

இந்த நிலையில்தான், முகமது ஜுபைர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ‘கௌரக்ஷா பஜ்ரங் படை’யின் தலைவர் பிட்டு பஜ்ரங்கி. இவரது சகோதரர் மகேஷ் பஞ்சால்.

இவர் கடந்த 13-ம் தேதி தனது கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சிலர் மகேஷ் பஞ்சாலை கடுமையாகத் தாக்கியதோடு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மகேஷ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நிலைமை இப்படி இருக்க, மகேஷ் பஞ்சால் தவறுதலாக நெருப்பில் விழுத்து தீக்காயமடைந்ததாகவும், அவரைத் தாக்கியதற்கான எந்த ஆதாரமும், தடயமும் இல்லை என்று ஃபரிதாபாத் போலீஸார் கூறியதாகவும் போலிச் செய்தியை பரப்பி இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த பிட்டு பஜ்ரங்கி, ஃபரிதாபாத் போலீஸில் முகமது ஜுபைர் மீது புகார் அளித்திருக்கிறார். அப்புகாரில்,  முகமது ஜுபைர் ஒரு அடிப்படைவாதி மற்றும் தீவிர வகுப்புவாதி. போலி செய்தித் தொழிற்சாலை நடத்துகிறார். ஆகவே, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றுவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிக் கொல்லவும் முகமது ஜுபைர் திட்டமிடப்பட்ட சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் கூறியிருக்கும் பிட்டு பஜ்ரங்கி, ஏற்கெனவே இவர் வெளியிட்ட போலிச் செய்திகளையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இதுகுறித்து ஃபரீதாபாத் போலீஸார் முகமது ஜுபைர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

Tags: hariyanaMohamed ZubairALT news
Share
Tweet
SendShare
Previous Post

”அம்ரித் பாரத்” ரயில்! – நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்!

Next Post

ஆம் ஆத்மி கோரிக்கையை நிராகரித்த மாநிலங்களவை தலைவர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies