உல்ஃபாவுடன் அமைதி ஒப்பந்தம்!
Sep 9, 2025, 04:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உல்ஃபாவுடன் அமைதி ஒப்பந்தம்!

Web Desk by Web Desk
Dec 30, 2023, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஸ்ஸாம் மிக முக்கியமான கிளர்ச்சிக் குழுவான உல்ஃபாவுடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமை பிரித்து, போடோலாந்து தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி, கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் போராட்டம் நடத்தி வந்தன. இக்குழுக்களுடன் மத்திய அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதையடுத்து, சில குழுக்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. மேலும், இக்குழுவைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்கி இருந்தனர். இதன் பிறகு, அஸ்ஸாம் மாநிலத்தின் 8 தீவிரவாத அமைப்புகளுடன் முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி, ஆதிவாசி தேசிய விடுதலைப் படை, ஆதிவாசி கோப்ரா அஸ்ஸாம் அமைப்பு, பிர்சா கமாண்டோ படை, சந்தல் புலி படை, ஆதிவாசி மக்கள் இராணுவம் ஆகியவை உட்பட 8 தீவிரவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அஸ்ஸாமில் செயல்படும் மிக முக்கியமான தீவிரவாத அமைப்பான, அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி எனப்படும், உல்ஃபா அமைப்பு பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.

இதைத் தொடர்ந்து, அந்த அமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த சூழலில், உல்ஃபா அமைப்புடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா ஆகியோர் முன்னிலையில் இன்று முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உல்ஃபாவின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும். மேலும், உல்ஃபா அமைப்பாக கலைக்கப்படும்” என்றார்.

இது தொடர்பாக அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “அஸ்ஸாமின் மிகப் பழமையான கிளர்ச்சிக் குழுவான உல்ஃபா வன்முறைப் பாதையை கைவிட ஒப்புக்கொண்டது. உல்ஃபா உடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

மேலும், சமாதான நடவடிக்கையின் வெற்றியை உறுதிசெய்வதற்கு மத்திய அரசின் மீதான உல்ஃபாவின் நம்பிக்கை மதிக்கப்படும் என்று உல்ஃபா தலைமைக்கு நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது தவிர, வடகிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்தார்.

ULFA the oldest insurgent group of Assam agreed to abjure the path of violence. Speaking on the signing of a memorandum of settlement with ULFA.
https://t.co/6H1DIHmmHy

— Amit Shah (@AmitShah) December 29, 2023

Tags: AssamAmit shaULFAhistoric peace deal
ShareTweetSendShare
Previous Post

ஆம் ஆத்மி கோரிக்கையை நிராகரித்த மாநிலங்களவை தலைவர்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 71.21 அடியாக அதிகரிப்பு!

Related News

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies