உல்ஃபாவுடன் அமைதி ஒப்பந்தம்!
Jul 24, 2025, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உல்ஃபாவுடன் அமைதி ஒப்பந்தம்!

Web Desk by Web Desk
Dec 30, 2023, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஸ்ஸாம் மிக முக்கியமான கிளர்ச்சிக் குழுவான உல்ஃபாவுடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமை பிரித்து, போடோலாந்து தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி, கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் போராட்டம் நடத்தி வந்தன. இக்குழுக்களுடன் மத்திய அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதையடுத்து, சில குழுக்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. மேலும், இக்குழுவைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்கி இருந்தனர். இதன் பிறகு, அஸ்ஸாம் மாநிலத்தின் 8 தீவிரவாத அமைப்புகளுடன் முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி, ஆதிவாசி தேசிய விடுதலைப் படை, ஆதிவாசி கோப்ரா அஸ்ஸாம் அமைப்பு, பிர்சா கமாண்டோ படை, சந்தல் புலி படை, ஆதிவாசி மக்கள் இராணுவம் ஆகியவை உட்பட 8 தீவிரவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அஸ்ஸாமில் செயல்படும் மிக முக்கியமான தீவிரவாத அமைப்பான, அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி எனப்படும், உல்ஃபா அமைப்பு பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.

இதைத் தொடர்ந்து, அந்த அமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த சூழலில், உல்ஃபா அமைப்புடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா ஆகியோர் முன்னிலையில் இன்று முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உல்ஃபாவின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும். மேலும், உல்ஃபா அமைப்பாக கலைக்கப்படும்” என்றார்.

இது தொடர்பாக அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “அஸ்ஸாமின் மிகப் பழமையான கிளர்ச்சிக் குழுவான உல்ஃபா வன்முறைப் பாதையை கைவிட ஒப்புக்கொண்டது. உல்ஃபா உடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

மேலும், சமாதான நடவடிக்கையின் வெற்றியை உறுதிசெய்வதற்கு மத்திய அரசின் மீதான உல்ஃபாவின் நம்பிக்கை மதிக்கப்படும் என்று உல்ஃபா தலைமைக்கு நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது தவிர, வடகிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்தார்.

ULFA the oldest insurgent group of Assam agreed to abjure the path of violence. Speaking on the signing of a memorandum of settlement with ULFA.
https://t.co/6H1DIHmmHy

— Amit Shah (@AmitShah) December 29, 2023

Tags: AssamAmit shaULFAhistoric peace deal
ShareTweetSendShare
Previous Post

ஆம் ஆத்மி கோரிக்கையை நிராகரித்த மாநிலங்களவை தலைவர்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 71.21 அடியாக அதிகரிப்பு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies