உல்ஃபாவுடன் அமைதி ஒப்பந்தம்!
Jan 14, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உல்ஃபாவுடன் அமைதி ஒப்பந்தம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 30, 2023, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஸ்ஸாம் மிக முக்கியமான கிளர்ச்சிக் குழுவான உல்ஃபாவுடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமை பிரித்து, போடோலாந்து தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி, கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் போராட்டம் நடத்தி வந்தன. இக்குழுக்களுடன் மத்திய அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதையடுத்து, சில குழுக்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. மேலும், இக்குழுவைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்கி இருந்தனர். இதன் பிறகு, அஸ்ஸாம் மாநிலத்தின் 8 தீவிரவாத அமைப்புகளுடன் முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி, ஆதிவாசி தேசிய விடுதலைப் படை, ஆதிவாசி கோப்ரா அஸ்ஸாம் அமைப்பு, பிர்சா கமாண்டோ படை, சந்தல் புலி படை, ஆதிவாசி மக்கள் இராணுவம் ஆகியவை உட்பட 8 தீவிரவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அஸ்ஸாமில் செயல்படும் மிக முக்கியமான தீவிரவாத அமைப்பான, அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி எனப்படும், உல்ஃபா அமைப்பு பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.

இதைத் தொடர்ந்து, அந்த அமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த சூழலில், உல்ஃபா அமைப்புடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா ஆகியோர் முன்னிலையில் இன்று முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உல்ஃபாவின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும். மேலும், உல்ஃபா அமைப்பாக கலைக்கப்படும்” என்றார்.

இது தொடர்பாக அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “அஸ்ஸாமின் மிகப் பழமையான கிளர்ச்சிக் குழுவான உல்ஃபா வன்முறைப் பாதையை கைவிட ஒப்புக்கொண்டது. உல்ஃபா உடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

மேலும், சமாதான நடவடிக்கையின் வெற்றியை உறுதிசெய்வதற்கு மத்திய அரசின் மீதான உல்ஃபாவின் நம்பிக்கை மதிக்கப்படும் என்று உல்ஃபா தலைமைக்கு நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது தவிர, வடகிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்தார்.

ULFA the oldest insurgent group of Assam agreed to abjure the path of violence. Speaking on the signing of a memorandum of settlement with ULFA.
https://t.co/6H1DIHmmHy

— Amit Shah (@AmitShah) December 29, 2023

Tags: AssamAmit shaULFAhistoric peace deal
ShareTweetSendShare
Previous Post

ஆம் ஆத்மி கோரிக்கையை நிராகரித்த மாநிலங்களவை தலைவர்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 71.21 அடியாக அதிகரிப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies