ஆளுநர் ஒப்பமிட மறுப்பது மசோதவையல்ல ஊழலை!
Jan 14, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநர் ஒப்பமிட மறுப்பது மசோதவையல்ல ஊழலை!

- பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன்!

Murugesan M by Murugesan M
Dec 30, 2023, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனியார் மருத்துவ கல்லூரிகளை திமுகவும் திமுகவை சார்ந்த அரசியல் கட்சிகளுமே நடத்தி வருகிறார்கள் எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

ஓட்டுனர் நடத்துனர் நியமனத்தில் பணம் வாங்கிதான் செந்தில்பாலாஜி சிறையில் இருக்கிறார்! டாஸ்மார்க்கில் பணம் சம்பாதித்தது, மின்சாரத்துறையில் சம்பாதித்தது, என பல குற்றங்கள் இருந்தாலும் நடத்துனர் ஓட்டுனரிடம் நியமனத்திற்காக லஞ்சம் வாங்கியதுதான் செந்தில் பாலாஜி மீதான முதல் குற்றச்சாட்டு!

திமுகவினரின் ஊழல் சொத்து 1,38,317 கோடிகள் என மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் கணக்கிட்டு வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு திமுகவினரிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லை!

பொன்முடி அவர்களும் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில்தான் சிறை செல்ல இருக்கிறார்! ”சொத்தும் பணமும் இருக்கிறது, ஆனால் அதை எப்படி சேர்த்தார்கள் என்னும் விவரத்தை அவர்கள் சொல்ல மறுக்கிறார்கள்” – என்னும் குற்றச்சாட்டு திமுக அமைச்சர்கள் அனைவர் மீதும் இருக்கிறது! விரைவில் சிறைசெல்லும் நிலையில் இன்னும் 11 அமைச்சர்கள் உள்ளனர்!

எப்படி பணத்தை சேர்த்தோம் என்னும் உண்மையை அமைச்சர்களாக இருக்கும் திமுகவினர் சொல்லவில்லை என்றாலும் பொதுமக்களாகிய நமக்கு அது தெரியும்! முறைகேடாக பணம் சேர்க்கும் பல வழிகளில் ஒரு வழி ”அரசு நியமனங்களின்போது பணம் வாங்குவது!” அப்படி பல்கலைக்கழகங்களில் நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநரிடம் இருப்பதை மாற்றி முதலமைச்சரிடம் இருக்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதாக்களுக்குத்தான் ஆளுநர் ஒப்பமிடவில்லை என வழக்குப்போட்டு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் திமுகவினர்!”

கிழங்குவகைகளை பயிரிடும் விவசாய நிலத்தின் உள் புகுந்து பயிரை நாசம் செய்துவிடும் பன்றி! பன்றியை பிடித்து, அதை தண்டிக்கும் வகையில் அதன் காதை அறுத்துவிடுவான் விவசாயி! “காதை அறுத்தாலும் பன்றி திருடுவதை நிருத்தாது“ என்பது பழமொழி! ”ஜெயிலுக்குப்போனாலும் திருடுவதை நிருத்த மாட்டார்கள்” என்பது திமுகவினருக்கான புது மொழி! ஆளுநர் எதிர்ப்பு இந்த புது மொழியை நமக்கு உறுதி செய்கிறது!

அரசியலும் ஆட்சியும் மாறி மாறி அமைவது! இன்று ஒருவர் முதலமைச்சராக இருப்பார் நாளை இன்னொருவர் முதலமைச்சராக வருவார்! பல்கலை கழகங்கள் சார்ந்த உயர் படிப்பு என்பது தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வது! பல்கலைக்கழகங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பினை கல்வி அறிவு எதுவும் இல்லாத, பணம் சம்பாதிக்கும் நோக்கம் உடைய அரசியல் வாதிகளிடம் மாற்றி மாற்றி ஒப்படைப்பதைவிட, தமிழகத்திற்கு வெளியில் இருந்து வருகைதரும் ஆர்.என்.ரவி போன்ற ஆளுநர்களிடம் இருப்பதுதான் நல்லது என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது!

”ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடையியாக மனிதனையும் கடித்ததாம்” என்பார்கள்! அதுபோல ஓட்டுனர் நடத்துனர், சத்துணவு ஆயா என்றெல்லாம் துவங்கி, பல்கலைக்கழகங்கள் வரை கால்பதிக்கவரும் ஊழலை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டியது நமது கடமையாகும்!

பல்கலைகழகங்களில் துணைதலைவர்களையும் மற்ற பேராசிரியர்களையும் நியமனம் செய்யும் உரிமை முதலமைச்சரிடம் இருந்தால், ஒரு லஞ்சத்தை முதலமைச்சாரிடம் கொடுத்துவிட்டு ஒருவரை நியமனம் செய்து நாமும் லஞ்சம் சம்பாதித்துவிடலாம் என்னும் எண்ணத்தில், தமிழகத்தில் இதர அரசியல்வாதிகளும் ஆசையில் இருக்கிறார்கள்!

முன்பெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் ஆளுநர்கள் அவ்வளவு கண்டிப்பாக இருக்கமாட்டார்கள், அவர்களும் எதையாவது வாங்கிக்கொண்டு முதலமைச்சரும் துறை அமைச்சரும் சொல்லும் நபரை நியமணம் செய்துவிடுவார்கள் எனதான் சொல்லப்படுகிறது! இப்போது பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் ஆளுநர்கள் மிக தெளிவாக நேர்மையாக நடந்துகொள்வதால், ஊழல் வாதிகளுக்கு பல்கலைக்கழக நியமன சட்டத்திருத்தம் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது!

நீட் தேர்வுகள் நடப்பதால் ஏழை எழிய மாணவர்களால் தேர்வாகி குறைந்த அளவிலான அரசு கட்டணத்தை செலுத்தி மருத்துவம்படிக்க முடிகிறது! ஆனால் அரசியல் வாதிகளால், மருத்துவ இருக்கையை வாங்கித்தருவதற்காக பணம் வாங்க முடியவில்லை! எனவேதான் தமிழகத்தில் பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சி தலைவர்கள் நீட் இல்லாமல் இருந்தால் வருடத்திற்கு 10 மருத்துவ படிப்பு இருக்கைகளை வாங்கி சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள்! எனவேதான் திமுக மட்டுமல்லாமல், பல அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்!

தனியார் மருத்துவ கல்லூரிகளை திமுகவும் திமுகவை சார்ந்த அரசியல் கட்சிகளுமே நடத்தி வருகிறார்கள்! நீட் தேர்வும் நீட்டில் தேர்வான மாணவர்களிடம் வாங்கவேண்டிய குறைந்த அளவிலான கட்டண நிர்ணயமும், தனியார் மருத்துவ கல்லூரி நடத்துவோருக்கு பல்லாயிரக் கோடிக்கணக்கான இழப்பினை தந்துள்ளது! இந்த கல்லூரி அதிபர்களிடம் பங்கு வாங்கிக்கொண்டிருந்த பல்வேறு அரசியலாருக்கும் இப்போது இழப்பு ஏற்பட்டுள்ளது! எனவேதான் தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்!

“காசேதான் கடவுளடா” என்பது திரைப்படப்பாடல் தமிழக அரசியலை பொறுத்தமட்டில் காசேதான் அரசியலடா! எனத் தெரிவித்துள்ளார்.

Tags: governor ravibjpdmk failskumari krishnan article
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் ஆணையர் நியமன மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

Next Post

செல்வமகள் சேமிப்புத் திட்டம்: வட்டியை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies