கனடா காலிஸ்தான் ஆதரவாளர் தீவிரவாதியாக அறிவிப்பு!
Mar 15, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடா காலிஸ்தான் ஆதரவாளர் தீவிரவாதியாக அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 30, 2023, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் லக்பீர் சிங் லண்டாவை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதியாக அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் எல்லையிலுள்ள பஞ்சாப் மாநிலம் டாரன் மாவட்டம் ஹரிகே கிராமத்தைச் சேர்ந்த நிரஞ்சன் சிங் மற்றும் பர்மிந்தர் கவுரின் ஆகியோரின் மகன் லக்பீர் சிங் லண்டா. கடந்த 1989-ம் ஆண்டு பிறந்த இவர், ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

மேலும், மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சப்ளை செய்வதிலும் ஈடுபட்டு வந்தார். தவிர, தீவிரவாத நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இது தொடர்பாக, லக்பீர் சிங் லண்டா மீது பஞ்சாப் மாநிலத்தில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, லண்டா கடந்த 2017-ம் ஆண்டு கனடாவில் குடியேறினார். 34 வயதாகும் இவர், தற்போது கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாநிலத்தின் தலைநகரான எட்மண்டனில் வசிக்கிறார். இவர், சர்வதேச தீவிரவாத அமைப்பான பாபர் கல்சா என்ற காலிஸ்தான் அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார்.

அதோடு, 2022-ம் ஆண்டு பஞ்சாப் காவல்துறையின் புலனாய்வுத் தலைமையகம் மற்றும் பஞ்சாப்பில் உள்ள சர்ஹாலி காவல் நிலையத்தின் மீதான ஆர்.பி.ஜி. தாக்குதல்கள் உட்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் மூளையாக செயல்பட்டிருக்கிறார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.

இந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி லக்பீர் சிங் லண்டாவை தேடப்படும் குற்றவாளியாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், லண்டாவின் சொந்த கிராமத்தில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. அதன்படி, லண்டாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படன.

இந்த நிலையில்தான், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் லக்பீர் சிங் லண்டாவை தீவிரவாதியாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.

Tags: home ministryDeclaredCanada based gangsterLakhbir singh landa
ShareTweetSendShare
Previous Post

புத்தாண்டு கொண்டாட்டம் – பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்!

Next Post

இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்களிப்பு – நினைவு தபால் தலையை வெளியிட்ட ஜே.பி நட்டா!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies