கனடா காலிஸ்தான் ஆதரவாளர் தீவிரவாதியாக அறிவிப்பு!
Oct 26, 2025, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடா காலிஸ்தான் ஆதரவாளர் தீவிரவாதியாக அறிவிப்பு!

Web Desk by Web Desk
Dec 30, 2023, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் லக்பீர் சிங் லண்டாவை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதியாக அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் எல்லையிலுள்ள பஞ்சாப் மாநிலம் டாரன் மாவட்டம் ஹரிகே கிராமத்தைச் சேர்ந்த நிரஞ்சன் சிங் மற்றும் பர்மிந்தர் கவுரின் ஆகியோரின் மகன் லக்பீர் சிங் லண்டா. கடந்த 1989-ம் ஆண்டு பிறந்த இவர், ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

மேலும், மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சப்ளை செய்வதிலும் ஈடுபட்டு வந்தார். தவிர, தீவிரவாத நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இது தொடர்பாக, லக்பீர் சிங் லண்டா மீது பஞ்சாப் மாநிலத்தில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, லண்டா கடந்த 2017-ம் ஆண்டு கனடாவில் குடியேறினார். 34 வயதாகும் இவர், தற்போது கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாநிலத்தின் தலைநகரான எட்மண்டனில் வசிக்கிறார். இவர், சர்வதேச தீவிரவாத அமைப்பான பாபர் கல்சா என்ற காலிஸ்தான் அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார்.

அதோடு, 2022-ம் ஆண்டு பஞ்சாப் காவல்துறையின் புலனாய்வுத் தலைமையகம் மற்றும் பஞ்சாப்பில் உள்ள சர்ஹாலி காவல் நிலையத்தின் மீதான ஆர்.பி.ஜி. தாக்குதல்கள் உட்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் மூளையாக செயல்பட்டிருக்கிறார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.

இந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி லக்பீர் சிங் லண்டாவை தேடப்படும் குற்றவாளியாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், லண்டாவின் சொந்த கிராமத்தில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. அதன்படி, லண்டாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படன.

இந்த நிலையில்தான், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் லக்பீர் சிங் லண்டாவை தீவிரவாதியாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.

Tags: home ministryDeclaredCanada based gangsterLakhbir singh landa
ShareTweetSendShare
Previous Post

புத்தாண்டு கொண்டாட்டம் – பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்!

Next Post

இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்களிப்பு – நினைவு தபால் தலையை வெளியிட்ட ஜே.பி நட்டா!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies