கனடா காலிஸ்தான் ஆதரவாளர் தீவிரவாதியாக அறிவிப்பு!
Aug 8, 2026, 04:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடா காலிஸ்தான் ஆதரவாளர் தீவிரவாதியாக அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 30, 2023, 03:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் லக்பீர் சிங் லண்டாவை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதியாக அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் எல்லையிலுள்ள பஞ்சாப் மாநிலம் டாரன் மாவட்டம் ஹரிகே கிராமத்தைச் சேர்ந்த நிரஞ்சன் சிங் மற்றும் பர்மிந்தர் கவுரின் ஆகியோரின் மகன் லக்பீர் சிங் லண்டா. கடந்த 1989-ம் ஆண்டு பிறந்த இவர், ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

மேலும், மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சப்ளை செய்வதிலும் ஈடுபட்டு வந்தார். தவிர, தீவிரவாத நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இது தொடர்பாக, லக்பீர் சிங் லண்டா மீது பஞ்சாப் மாநிலத்தில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, லண்டா கடந்த 2017-ம் ஆண்டு கனடாவில் குடியேறினார். 34 வயதாகும் இவர், தற்போது கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாநிலத்தின் தலைநகரான எட்மண்டனில் வசிக்கிறார். இவர், சர்வதேச தீவிரவாத அமைப்பான பாபர் கல்சா என்ற காலிஸ்தான் அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார்.

அதோடு, 2022-ம் ஆண்டு பஞ்சாப் காவல்துறையின் புலனாய்வுத் தலைமையகம் மற்றும் பஞ்சாப்பில் உள்ள சர்ஹாலி காவல் நிலையத்தின் மீதான ஆர்.பி.ஜி. தாக்குதல்கள் உட்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் மூளையாக செயல்பட்டிருக்கிறார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.

இந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி லக்பீர் சிங் லண்டாவை தேடப்படும் குற்றவாளியாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், லண்டாவின் சொந்த கிராமத்தில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. அதன்படி, லண்டாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படன.

இந்த நிலையில்தான், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் லக்பீர் சிங் லண்டாவை தீவிரவாதியாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.

Tags: home ministryDeclaredCanada based gangsterLakhbir singh landa
Share
Tweet
SendShare
Previous Post

புத்தாண்டு கொண்டாட்டம் – பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்!

Next Post

இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்களிப்பு – நினைவு தபால் தலையை வெளியிட்ட ஜே.பி நட்டா!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies