கனடா காலிஸ்தான் ஆதரவாளர் தீவிரவாதியாக அறிவிப்பு!
Jun 23, 2026, 04:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடா காலிஸ்தான் ஆதரவாளர் தீவிரவாதியாக அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 30, 2023, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் லக்பீர் சிங் லண்டாவை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதியாக அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் எல்லையிலுள்ள பஞ்சாப் மாநிலம் டாரன் மாவட்டம் ஹரிகே கிராமத்தைச் சேர்ந்த நிரஞ்சன் சிங் மற்றும் பர்மிந்தர் கவுரின் ஆகியோரின் மகன் லக்பீர் சிங் லண்டா. கடந்த 1989-ம் ஆண்டு பிறந்த இவர், ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

மேலும், மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சப்ளை செய்வதிலும் ஈடுபட்டு வந்தார். தவிர, தீவிரவாத நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இது தொடர்பாக, லக்பீர் சிங் லண்டா மீது பஞ்சாப் மாநிலத்தில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, லண்டா கடந்த 2017-ம் ஆண்டு கனடாவில் குடியேறினார். 34 வயதாகும் இவர், தற்போது கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாநிலத்தின் தலைநகரான எட்மண்டனில் வசிக்கிறார். இவர், சர்வதேச தீவிரவாத அமைப்பான பாபர் கல்சா என்ற காலிஸ்தான் அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார்.

அதோடு, 2022-ம் ஆண்டு பஞ்சாப் காவல்துறையின் புலனாய்வுத் தலைமையகம் மற்றும் பஞ்சாப்பில் உள்ள சர்ஹாலி காவல் நிலையத்தின் மீதான ஆர்.பி.ஜி. தாக்குதல்கள் உட்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் மூளையாக செயல்பட்டிருக்கிறார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.

இந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி லக்பீர் சிங் லண்டாவை தேடப்படும் குற்றவாளியாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், லண்டாவின் சொந்த கிராமத்தில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. அதன்படி, லண்டாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படன.

இந்த நிலையில்தான், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் லக்பீர் சிங் லண்டாவை தீவிரவாதியாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.

Tags: home ministryDeclaredCanada based gangsterLakhbir singh landa
ShareTweetSendShare
Previous Post

புத்தாண்டு கொண்டாட்டம் – பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்!

Next Post

இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்களிப்பு – நினைவு தபால் தலையை வெளியிட்ட ஜே.பி நட்டா!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies