இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்களிப்பு - நினைவு தபால் தலையை வெளியிட்ட ஜே.பி நட்டா!
Jul 7, 2025, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்களிப்பு – நினைவு தபால் தலையை வெளியிட்ட ஜே.பி நட்டா!

Web Desk by Web Desk
Dec 30, 2023, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில், தேசியத் தலைவர்  ஜெ.பி.நட்டா தபால் தலை வெளியிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் தோட்டத் தொழில் மற்றும் பிற முக்கியமான உள்கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதை அங்கீகரிக்கும் நினைவு அஞ்சல் முத்திரையை பாஜக தலைவர் ஜே.பி நட்டா இன்று வெளியிட்டார்.

புதுதில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், ஜே.பி.நட்டா இன்று  நினைவு முத்திரையை வெளியிட, இலங்கை அரசாங்கத்தின் கிழக்கு மாகாண ஆளுநர் தொண்டமான் அதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார். பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரீக பிணைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மாகாணத்தில் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்காற்றிய தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு சென்ற முதல் தமிழர்களின் வருகையின் 200 வருட மைல்கல்லை ஒட்டி இந்த நினைவேந்தல் நிகழ்வு நடந்து மிகவும் பொருத்தமானது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை 2014ல் பதவியேற்றது முதல், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்கு, பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். மோடியின் தலைமையில், மத்திய அரசு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு 14,000 வீடுகள், சுகாதாரம், கல்வி மற்றும் கலாச்சார வசதிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் உள்ளிட்டவரை அவர் மேற்கோளிட்டார். மேலும், சவாலான பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் அண்டை நாடு என்ற கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கணிசமான நிதி உதவியையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து முதல் குழு இலங்கை வந்து 200 வருடங்கள் ஆகின்றன என்பதையும் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அஞ்சல் முத்திரை வெளியீடு இரு நாட்டின் நல்லுறவை அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இவ்விழாவில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மூத்த தலைவர்கள் விஜய் சௌத்தேவாலே, பொன்ராதாகிருஷ்ணன், H.ராஜா,  வி பி துரைசாமி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: bjp k annamalaibjp nadda
ShareTweetSendShare
Previous Post

கனடா காலிஸ்தான் ஆதரவாளர் தீவிரவாதியாக அறிவிப்பு!

Next Post

தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை! – தாயுடன் சேர்த்த வனத்துறையினர்!

Related News

திருவிடைமருதூர் கோயிலில் 1500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

Load More

அண்மைச் செய்திகள்

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies