தெலுங்கானாவில் தலைமறைவாக இருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.
கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்ற இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு பரோல் பெற்று தலைமறைவாக இருந்தார். இவன் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவன். இவரை டெல்லி போலீசார் பல ஆண்டுகளாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று தெலுங்கானாவில் வைத்து கைது செய்தனர்.
இதுகுறித்து டெல்லி போலீசார் கூறியதாவது, கைது செய்யப்பட்டவர் கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர். கடந்த 2014-இல் பரோல் பெற்று தலைமறைவாக இருந்தார் என்று கூறினர்.
முன்னதாக, கடந்த நவம்பரில், மும்பையில் கோகோயின் போதைப்பொருள் கடத்தியதற்காக ஜாம்பியன் மற்றும் தான்சானிய நாட்டைச் சேர்ந்த இரண்டு முக்கிய கூட்டாளிகளை மும்பை போலீசார் கைது செய்தனர்.