இலங்கைத் தமிழர்கள் நினைவு தபால் தலை வெளியீடு!
Aug 18, 2025, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கைத் தமிழர்கள் நினைவு தபால் தலை வெளியீடு!

Web Desk by Web Desk
Dec 30, 2023, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையில் தோட்டத் தொழில் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதில், இந்திய வம்சாவளி தமிழர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், நினைவு தபால் தலையை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று வெளியிட்டார்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1883-ம் ஆண்டு இலங்கையில் தேயிலை தோட்டத் தொழில் உட்பட பல்வேறு வேலைகளுக்காக தமிழகத்திலிருந்து ஏராளமான தமிழர்களை அழைத்துச் சென்றனர். இலங்கையில் முக்கிய உட்கட்டமைப்புகளை கட்டியெழுப்பியது இவர்கள்தான்.

இந்த நிலையில், இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையிலும், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, நினைவு தபால் தலையை இன்று வெளியிட்டார்.

இந்த தபால் தலையை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜெ.பி.நட்டா, “இன்று நாம் 1883-ம் ஆண்டை நினைவு கூர்வதும், 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சென்ற தமிழர்களின் இந்திய வம்சாவளியை நினைவு கூர்வதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

பிரிட்டிஷார் இலங்கையில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கிய பிறகு, தமிழர்களை அங்கு குடியேற ஊக்குவித்து, தங்கள் வயல்களில் வேலை செய்ய பணித்தனர். அந்த தமிழர்களின் போராட்டம் மிகவும் வேதனையானது. அந்த மக்கள் இலங்கைக்கு இடம்பெயர்வதால் ஏற்படும் அபாயங்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை” என்றார்.

மேலும், 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இலங்கைத் தமிழர்களுடன் ஈடுபாடு கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியையும் ஜெ.பி.நட்டா பாராட்டினார். 2017-ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்கான பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு 14,000 வீடுகள், சுகாதாரம், கல்வி, கலாசார வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பேசுகையில், “பொருளாதார நெருக்கடியின்போது இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் பிரதமர் மோடியின் முயற்சிகள் மற்றும் அண்டை நாடுகளின் கொள்கை மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு அவர் அளித்த ஆதரவுக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

நாங்கள் இலங்கைக்கு வந்தபோது, நாங்கள் 3-வது பெரிய இனம் என்று ​​​​எங்களிடம் கூறப்பட்டது. ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு, எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், அதன் பிறகு எங்கள் போராட்டம் தொடங்கி விட்டது. நாங்கள் நாடற்றவர்களாகி விட்டோம். இப்போது குடியுரிமை பெற்றிருந்தாலும், மற்றவர்களுக்கு இணையாக சமத்துவத்தை விரும்புகிறோம்” என்றார்.

நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

Tags: bjpreleasePostage Stamp
ShareTweetSendShare
Previous Post

2024 புத்தாண்டு! – எதற்கெல்லாம் தடை தெரியுமா?

Next Post

பிரேமலதா கோரிக்கை – என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies