இலங்கைத் தமிழர்கள் நினைவு தபால் தலை வெளியீடு!
Nov 16, 2025, 09:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கைத் தமிழர்கள் நினைவு தபால் தலை வெளியீடு!

Web Desk by Web Desk
Dec 30, 2023, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையில் தோட்டத் தொழில் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதில், இந்திய வம்சாவளி தமிழர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், நினைவு தபால் தலையை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று வெளியிட்டார்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1883-ம் ஆண்டு இலங்கையில் தேயிலை தோட்டத் தொழில் உட்பட பல்வேறு வேலைகளுக்காக தமிழகத்திலிருந்து ஏராளமான தமிழர்களை அழைத்துச் சென்றனர். இலங்கையில் முக்கிய உட்கட்டமைப்புகளை கட்டியெழுப்பியது இவர்கள்தான்.

இந்த நிலையில், இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையிலும், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, நினைவு தபால் தலையை இன்று வெளியிட்டார்.

இந்த தபால் தலையை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜெ.பி.நட்டா, “இன்று நாம் 1883-ம் ஆண்டை நினைவு கூர்வதும், 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சென்ற தமிழர்களின் இந்திய வம்சாவளியை நினைவு கூர்வதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

பிரிட்டிஷார் இலங்கையில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கிய பிறகு, தமிழர்களை அங்கு குடியேற ஊக்குவித்து, தங்கள் வயல்களில் வேலை செய்ய பணித்தனர். அந்த தமிழர்களின் போராட்டம் மிகவும் வேதனையானது. அந்த மக்கள் இலங்கைக்கு இடம்பெயர்வதால் ஏற்படும் அபாயங்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை” என்றார்.

மேலும், 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இலங்கைத் தமிழர்களுடன் ஈடுபாடு கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியையும் ஜெ.பி.நட்டா பாராட்டினார். 2017-ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்கான பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு 14,000 வீடுகள், சுகாதாரம், கல்வி, கலாசார வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பேசுகையில், “பொருளாதார நெருக்கடியின்போது இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் பிரதமர் மோடியின் முயற்சிகள் மற்றும் அண்டை நாடுகளின் கொள்கை மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு அவர் அளித்த ஆதரவுக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

நாங்கள் இலங்கைக்கு வந்தபோது, நாங்கள் 3-வது பெரிய இனம் என்று ​​​​எங்களிடம் கூறப்பட்டது. ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு, எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், அதன் பிறகு எங்கள் போராட்டம் தொடங்கி விட்டது. நாங்கள் நாடற்றவர்களாகி விட்டோம். இப்போது குடியுரிமை பெற்றிருந்தாலும், மற்றவர்களுக்கு இணையாக சமத்துவத்தை விரும்புகிறோம்” என்றார்.

நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

Tags: bjpreleasePostage Stamp
ShareTweetSendShare
Previous Post

2024 புத்தாண்டு! – எதற்கெல்லாம் தடை தெரியுமா?

Next Post

பிரேமலதா கோரிக்கை – என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

Related News

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies