அயோத்தியில் மகரிஷி வால்மீகி விமான நிலையம் திறப்பு!
Sep 9, 2025, 07:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் மகரிஷி வால்மீகி விமான நிலையம் திறப்பு!

Web Desk by Web Desk
Dec 30, 2023, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் 1,450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கோயில் நாட்டின் மிகப் பெரிய கலாச்சார மையமாகத் திகழும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அயோத்திக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கேற்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, அயோத்தியில் இருந்த சிறிய அளவிலான இரயில் நிலையம், 240 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டது. அதேபோல, 1,450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டது.

இரயில் நிலையத்துக்கு அயோத்தி தாம் இரயில் நிலையம் என்றும், விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்றும் பெயர் சூட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்திலிருந்து நேராக இரயில் நிலையத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, அயோத்தி தாம் இரயில் நிலையத்தைத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மகரிஷி வால்மீகி விமான நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளை கையாளும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விமான நிலைய முனையக் கட்டடத்தின் முகப்பு அயோத்தி இராமர் கோவில் கட்டடத்தை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கட்டடத்தின் உட்புற சுவர் ஓவியங்கள், இராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த விமான நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின் உற்பத்தி நிலையம் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

Tags: PM ModiairportInaguratesAyodya
ShareTweetSendShare
Previous Post

பிரேமலதா கோரிக்கை – என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

Next Post

உஜ்வாலா பயனாளி வீட்டில் டீ அருந்திய பிரதமர் மோடி!

Related News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies