பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் 10 கோடியாவது பயனாளியின் வீட்டுக்குப் பிரதமர் மோடி சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள மீரா மஞ்சியின் வீட்டிற்குச் சென்றார். அவர் பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டமான உஜ்வாலா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளி ஆவார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“பகவான் ஸ்ரீ ராம் நகரில் உள்ள சகோதரி மீரா மஞ்சியின் வீட்டிற்குச் சென்ற அனுபவம் மறக்க முடியாதது!”
भगवान श्री राम की नगरी में बहन मीरा मांझी के घर जाने का अनुभव अविस्मरणीय बन गया है! pic.twitter.com/45l7YxX2jy
— Narendra Modi (@narendramodi) December 30, 2023
“அயோத்தியில், உஜ்வாலா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளியான சகோதரி மீரா-வின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடினேன். அரசின் திட்டங்கள் முழு குடும்பத்தின் வாழ்க்கையையும் எப்படி எளிதாக்கி இருக்கின்றன என்பதை அறிந்து மிகவும் திருப்தி அடைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.