71% வரி வசூல் பெற்ற திமுக அரசு செய்த பணிகள் என்ன? - அண்ணாமலை கேள்வி!
Jul 5, 2025, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

71% வரி வசூல் பெற்ற திமுக அரசு செய்த பணிகள் என்ன? – அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Dec 31, 2023, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜிஎஸ்டி வரியில் நேரடியாக 50% மாநிலங்களுக்குக் கிடைக்கிறது, நிதி ஆணையம் மூலமாக, கூடுதல் 21% மாநிலங்களுக்குக் கிடைக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை நாகப்பட்டினத்தில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

விஜயாலய சோழன் முதல் மூன்றாம் ராஜேந்திர சோழன் வரை ஏறக்குறைய 400 ஆண்டு காலம் உயர்புகழில் இருந்தது நாகை துறைமுகம். தென்கிழக்காசியாவை சோழர்கள் கடல் மார்க்கமாக வெல்வதற்கு மிக முக்கிய தளமாக செயல்பட்டது.

63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயன்மாரின் மண் இது. இங்குள்ள மீனவப் பெருங்குடி மக்களை, ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கல்வெட்டுகளில் ‘சிவன் படவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அவர்கள் சைவ நெறியின் பாரம்பரியத்தை உணர்த்துகிறது. புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோவில் அமைந்திருக்கும் தொகுதி. சூரபத்மனை அழிக்க அன்னை பராசக்தியிடம் இருந்து சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த வரலாற்றுக்குரிய மண்.

ஜிஎஸ்டி வரியில் நேரடியாக 50% மாநிலங்களுக்குக் கிடைக்கிறது. நிதி ஆணையம் மூலமாக, கூடுதல் 21% மாநிலங்களுக்குக் கிடைக்கிறது. ரூ.100 ஜிஎஸ்டி வரியில், ரூ. 71 மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. மீதமுள்ள 29% வரிப்பணம், மத்திய அரசு திட்டங்களுக்குப் பயன்படுகின்றன. அந்த நிதியில் இருந்து, தமிழகத்திற்கு நமது பாரத பிரதமர் வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று நாகப்பட்டினத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 35,647 பேருக்கு பிரதமரின் வீடு, 24,748 வீடுகளில் குழாயில் குடிநீர், 91,043 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 42,372 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 64,223 பேருக்கு, 53,252 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் என இதுவரை ரூ. 30,000, முத்ரா கடன் உதவி 3,879 கோடி என நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள திட்டங்கள் ஏராளம்.

71% வரி வசூல் பெற்ற திமுக அரசு செய்த பணிகள் என்ன? நாகப்பட்டினம் தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, குளிர்பதனக் கிடங்குகள், நாகூர் அரசு மருத்துவமனையில் வசதிகள் மேம்பாடு, உரத் தொழிற்சாலை, கடல் உணவு மண்டலம், திருமருகலில் தொழிற்பேட்டை, அக்கரைபேட்டை மீன் இறங்குதளம் விரிவாக்கம், நாகூர் முதல் கோடியக்கரை வரையிலான கடற்கரை கிராமங்கள் பாறை கற்கள் அமைத்தல், நாகப்பட்டினம் நகரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி கொள்முதல் நிலையம் என ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால், 99% வாக்குறுதிகள் நிறைவேற்றிவிட்டதாகப் பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். லஞ்சமும் ஊழலும் தவிர திமுக ஆட்சியில் வேறொன்றுமில்லை.

நாகப்பட்டினம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர்ஷா நவாஸ் தொகுதியில் இருப்பதை விட, தொலைக்காட்சியில்தான் அதிக நாட்கள் இருக்கிறார். நாகப்பட்டினம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் செல்வராஜ் செய்த ஒரே சாதனை முதலமைச்சர் தலைமையில் தன் இல்லத் திருமண நிகழ்வை நடத்தியது மட்டும்தான். இதற்கா மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்?

வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிராவில் தீ விபத்து – 6 பேர் பலி!

Next Post

கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி 51% அதிகரிப்பு: அமித்ஷா!

Related News

அரக்கோணத்தில் இரவில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் – போலீசார் விசாரணை!

வாலாஜாபேட்டை அருகே திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா கோலாகலம்!

சத்தியமங்கலம் அருகே கோயில் பூட்டை உடைத்து வழிபாடு நடத்திய மக்கள்!

இரவு நேரத்தில் விசாரணைக்கு வருமாறு செல்போனில் அழைத்து டார்ச்சர் – போலீசார் மீது வெள்ளி பட்டறை உரிமையாளர் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

எதிர்கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் மக்கள் மீது அக்கறை இருக்குமா?- திமுகவுக்கு விஜய் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தொடரும் காவல்துறையின் அத்துமீறல் – இளைஞர் மீது தாக்குதல் நடத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு – பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி காவல்துறையில் புகார்!

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் உயரிய விருது!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies