உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 40-வது இடம்: பிரதமர் மோடி பெருமிதம்!
Oct 26, 2025, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 40-வது இடம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
Dec 31, 2023, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2015-ம் ஆண்டு உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 81-வது இடத்தில் இருந்த நாம், இன்று 40-வது இடத்தில் இருக்கிறோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று 108-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியபோது, “இந்தியா கண்டுபிடிப்புகளின் மையமாக மாறி இருக்கிறது. இதை நாம் நிறுத்தப் போவதில்லை. 2015-ம் ஆண்டு உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 81-வது இடத்தில் இருந்தோம். இன்று 40-வது இடத்தில் இருக்கிறோம்.

“நாட்டு, நாட்டு” பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தபோது நாடு முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்தது. “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” படத்துக்கு கிடைத்த கௌரவத்தை கேட்டதும் யார் மகிழ்ச்சி அடையவில்லை? இந்த 2 ஆஸ்கர் விருது மூலம் இந்தியாவின் படைப்பாற்றலை உலகமே கண்டு கொண்டது. சுற்றுச்சூலுடனான நமது தொடர்பை புரிந்துகொண்டது.

“சந்திரயான்-3″ வெற்றிக்காக இன்றும் மக்கள் எனக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகிறார்கள். என்னைப் போலவே நீங்களும் நமது விஞ்ஞானிகளைப் பற்றி, குறிப்பாக, பெண் விஞ்ஞானிகளைப் பற்றி பெருமைப்படுவீர்கள் என்று நம்புகிறேன். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது உட்பட பல சிறப்பான சாதனைகளை இந்த ஆண்டு இந்தியா செய்திருக்கிறது.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நமது பாரத பூமியை பெருமையடையச் செய்த மகள்கள் இருக்கிறார்கள். சாவித்ரிபாய் பூலே, ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் ஆளுமை ஒரு கலங்கரை விளக்கம் போன்றது. இது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண் சக்திக்கு மேலும் வழிகாட்டும். இருவரின் பிறந்த நாளை வருகிற ஜனவரி 3-ம் தேதி கொண்டாட உள்ளோம்.

அந்நிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய நாட்டின் பல பெரிய ஆளுமைகளில் ராணி வேலு நாச்சியாரின் பெயரும் ஒன்று. அவரை தமிழகத்தின் என் சகோதர, சகோதரிகள் இன்றும் வீரமங்கை என்று நினைவுகூர்கிறார்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய ராணி வேலு நாச்சியாரின் வீரம் மிகவும் ஊக்கம் அளிக்கிறது.

சிவகங்கை ராஜ்ஜியத்தின் மீதான தாக்குதலின்போது மன்னராக இருந்தார். அவரது கணவர் ஆங்கிலேயர்களால் கொல்லப் பட்டார். ராணி வேலு நாச்சியாரும் அவரது மகளும் எதிரிகளிடம் இருந்து தப்பினர். மருது சகோதரர்களுடன் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்குவதிலும், படை வளர்ப்பதிலும் பல ஆண்டுகளாக இடைவிடாமல் மும்முரமாக செயல்பட்டனர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை முழு தயார் நிலையுடன் தொடங்கி மிகுந்த தைரியத்துடனும் உறுதியுடனும் போராடினார். இராணுவத்தில் முதல் முறையாக அனைத்து மகளிர் குழுவை உருவாக்கியவர்களில் ராணி வேலு நாச்சியாரின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்றார்.

Tags: PM Modimaan ki battVelu natchiyar
ShareTweetSendShare
Previous Post

நாளை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்: இன்று திருப்பதியில் இஸ்ரோ குழு!

Next Post

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies