மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு!
Jul 29, 2026, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 31, 2023, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழும் என்று மர்ம நபர் விடுத்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது தெரியவில்லை.

சமீபகாலமாகவே மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக இருக்கிறது. கடந்த மாதம் மும்பையைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத்தின் அதிபர் முகேஷ் அம்பானிக்கு, 400 கோடி ரூபாய் வரை பணம் கேட்டு தொடர் கொலை மிரட்டல் இ மெயில் வந்தது.

அதேபோல, கடந்த 25-ம் தேதி ரிசர்வ் வங்கி அலுவலகம் உட்பட 11 இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை போலீஸாருக்கு இ மெயில் வந்தது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த மிரட்டலை கிலாபத் அமைப்பு அனுப்பியதாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி ஜெய்ப்பூர் விமான நிலையத்தை வெடிக்கச் செய்யப் போவதாக விமான நிலைய அதிகாரிக்கு மிரட்டல் வந்தது. இப்படி அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் இ மெயில் மற்றும் போன் கால் வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மும்பை நகரில் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுகள் வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.

இதையடுத்து, போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது தெரியவில்லை. அவன் யார், எங்கிருந்து பேசினான் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், இன்னொருபுறம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மும்பை நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், தீவிர வாகன சோதனையிலும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் மும்பையில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: mumbainew yearBomb Thread
ShareTweetSendShare
Previous Post

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 40-வது இடம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு 2024 : பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies