மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு!
Apr 29, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 31, 2023, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழும் என்று மர்ம நபர் விடுத்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது தெரியவில்லை.

சமீபகாலமாகவே மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக இருக்கிறது. கடந்த மாதம் மும்பையைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத்தின் அதிபர் முகேஷ் அம்பானிக்கு, 400 கோடி ரூபாய் வரை பணம் கேட்டு தொடர் கொலை மிரட்டல் இ மெயில் வந்தது.

அதேபோல, கடந்த 25-ம் தேதி ரிசர்வ் வங்கி அலுவலகம் உட்பட 11 இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை போலீஸாருக்கு இ மெயில் வந்தது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த மிரட்டலை கிலாபத் அமைப்பு அனுப்பியதாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி ஜெய்ப்பூர் விமான நிலையத்தை வெடிக்கச் செய்யப் போவதாக விமான நிலைய அதிகாரிக்கு மிரட்டல் வந்தது. இப்படி அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் இ மெயில் மற்றும் போன் கால் வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மும்பை நகரில் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுகள் வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.

இதையடுத்து, போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது தெரியவில்லை. அவன் யார், எங்கிருந்து பேசினான் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், இன்னொருபுறம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மும்பை நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், தீவிர வாகன சோதனையிலும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் மும்பையில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: mumbainew yearBomb Thread
ShareTweetSendShare
Previous Post

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 40-வது இடம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு 2024 : பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies