மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு!
Oct 26, 2025, 11:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Dec 31, 2023, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழும் என்று மர்ம நபர் விடுத்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது தெரியவில்லை.

சமீபகாலமாகவே மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக இருக்கிறது. கடந்த மாதம் மும்பையைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத்தின் அதிபர் முகேஷ் அம்பானிக்கு, 400 கோடி ரூபாய் வரை பணம் கேட்டு தொடர் கொலை மிரட்டல் இ மெயில் வந்தது.

அதேபோல, கடந்த 25-ம் தேதி ரிசர்வ் வங்கி அலுவலகம் உட்பட 11 இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை போலீஸாருக்கு இ மெயில் வந்தது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த மிரட்டலை கிலாபத் அமைப்பு அனுப்பியதாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி ஜெய்ப்பூர் விமான நிலையத்தை வெடிக்கச் செய்யப் போவதாக விமான நிலைய அதிகாரிக்கு மிரட்டல் வந்தது. இப்படி அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் இ மெயில் மற்றும் போன் கால் வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மும்பை நகரில் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுகள் வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.

இதையடுத்து, போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது தெரியவில்லை. அவன் யார், எங்கிருந்து பேசினான் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், இன்னொருபுறம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மும்பை நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், தீவிர வாகன சோதனையிலும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் மும்பையில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: mumbainew yearBomb Thread
ShareTweetSendShare
Previous Post

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 40-வது இடம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு 2024 : பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்!

Related News

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies