ஹௌதி ஏவுகணைகள்: மீண்டும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!
Aug 17, 2025, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி ஏவுகணைகள்: மீண்டும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

Web Desk by Web Desk
Jan 1, 2024, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா மீண்டும் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2-வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில், 1,200 பேர் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் இராணுவம் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் இருக்கிறது. மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 22,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போரில் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

அதன்படி, ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். மாறாக, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் வரும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேலில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவுக்கு வந்த கப்பலை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர்.

அதேபோல, கடந்த வாரம் சௌதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு 25 இந்திய பணியாளர்களுடன் மங்களூருவை நோக்கி வந்த கப்பல் மீது செங்கடல் பகுதியில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கடல் பகுதியில் வந்த ஒரு கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனை அமெரிக்க இராணுவப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணையை அமெரிக்க இராணுவப் படை மீண்டும் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2-வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: americaFiredHuthiMissisles
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து!

Next Post

94.70% வழக்குகள்: ரூ.56 கோடி சொத்து பறிமுதல்: 2023-ல் என்.ஐ.ஏ.வின் சாதனை!

Related News

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

உக்ரைன் போரை நிறுத்தினால் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன் – ஹிலாரி கிளிண்டன்

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை -155 பாக் வீரர்கள் உயிரிழந்தது அம்பலம்!

கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்!

கோவை ரத்தினபுரியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா – கிருஷ்ணர், ராதை வேடங்களில் குழந்தைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies