ஹௌதி ஏவுகணைகள்: மீண்டும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!
Mar 15, 2026, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி ஏவுகணைகள்: மீண்டும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 1, 2024, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா மீண்டும் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2-வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில், 1,200 பேர் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் இராணுவம் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் இருக்கிறது. மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 22,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போரில் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

அதன்படி, ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். மாறாக, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் வரும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேலில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவுக்கு வந்த கப்பலை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர்.

அதேபோல, கடந்த வாரம் சௌதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு 25 இந்திய பணியாளர்களுடன் மங்களூருவை நோக்கி வந்த கப்பல் மீது செங்கடல் பகுதியில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கடல் பகுதியில் வந்த ஒரு கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனை அமெரிக்க இராணுவப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணையை அமெரிக்க இராணுவப் படை மீண்டும் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2-வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: americaFiredHuthiMissisles
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து!

Next Post

94.70% வழக்குகள்: ரூ.56 கோடி சொத்து பறிமுதல்: 2023-ல் என்.ஐ.ஏ.வின் சாதனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies