ஹௌதி ஏவுகணைகள்: மீண்டும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!
Jan 14, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி ஏவுகணைகள்: மீண்டும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 1, 2024, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா மீண்டும் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2-வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில், 1,200 பேர் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் இராணுவம் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் இருக்கிறது. மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 22,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போரில் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

அதன்படி, ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். மாறாக, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் வரும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேலில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவுக்கு வந்த கப்பலை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர்.

அதேபோல, கடந்த வாரம் சௌதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு 25 இந்திய பணியாளர்களுடன் மங்களூருவை நோக்கி வந்த கப்பல் மீது செங்கடல் பகுதியில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கடல் பகுதியில் வந்த ஒரு கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனை அமெரிக்க இராணுவப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணையை அமெரிக்க இராணுவப் படை மீண்டும் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2-வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: FiredHuthiMissislesamerica
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து!

Next Post

94.70% வழக்குகள்: ரூ.56 கோடி சொத்து பறிமுதல்: 2023-ல் என்.ஐ.ஏ.வின் சாதனை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies