ஹௌதி ஏவுகணைகள்: மீண்டும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!
Jul 29, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி ஏவுகணைகள்: மீண்டும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 1, 2024, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா மீண்டும் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2-வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில், 1,200 பேர் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் இராணுவம் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் இருக்கிறது. மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 22,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போரில் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

அதன்படி, ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். மாறாக, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் வரும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேலில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவுக்கு வந்த கப்பலை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர்.

அதேபோல, கடந்த வாரம் சௌதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு 25 இந்திய பணியாளர்களுடன் மங்களூருவை நோக்கி வந்த கப்பல் மீது செங்கடல் பகுதியில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கடல் பகுதியில் வந்த ஒரு கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனை அமெரிக்க இராணுவப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணையை அமெரிக்க இராணுவப் படை மீண்டும் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2-வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: americaFiredHuthiMissisles
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து!

Next Post

94.70% வழக்குகள்: ரூ.56 கோடி சொத்து பறிமுதல்: 2023-ல் என்.ஐ.ஏ.வின் சாதனை!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies