அயோத்தி குழந்தை இராமர் சிலை 17-ம் தேதி நகர்வலம்!
Jun 6, 2025, 09:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி குழந்தை இராமர் சிலை 17-ம் தேதி நகர்வலம்!

Web Desk by Web Desk
Jan 2, 2024, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் மூலவர் குழந்தை இராமர் சிலை வரும் 17-ம் தேதி அயோத்தியில் நகர்வலம் வருகிறது.

பா.ஜ.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, அயோத்தியில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றையதினம் மூலவர் குழந்தை இராமர் சிலை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது.

‘பிராண பிரதிஷ்டை’ என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும், நாடு முழுவதும் இருந்து 10,000 முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சிலை, கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் குழந்தை இராமர் சிலையை காண மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

எனவே, மூலவர் குழந்தை இராமர் சிலையை வரும் 17-ம் தேதி உலகுக்குக் காட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி, இராமர் சிலை அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படவிருப்பதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்திருக்கிறார்.

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்திலும் அயோத்தி நகரில் வால்மீகி சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்புப் பகுதியிலும் அட்சதை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சம்பத் ராய் இதுகுறித்து கூறுகையில், “கோவில் கருவறையில் பாலராமர் சிலையை நிறுவும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி 22-ம் தேதி பிற்பகல் 12.20 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சுற்று வட்டாரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் சந்தைகளிலும் பக்தர்கள் ஆரத்தி எடுத்தும், பிரசாதம் வழங்கியும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பக்தர்கள் தங்கள் வீடுகளில் ஸ்ரீராம ஜோதி என்னும் தீபமேற்றி வழிபாடு செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வேண்டுகோளை பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களிடம் தெரிவித்திருக்கிறார்” என்றார்.

Tags: ProcessionAyodyaRamar StatueJanuary 17
ShareTweetSendShare
Previous Post

ஒரே ஆண்டில் 16 முறை புத்தாண்டு கொண்டாடும் விண்வெளி வீரர்கள்!

Next Post

காங்கிரஸ் ஆட்சியில் ரூ.30 லட்சம் கோடி,  பாஜக ஆட்சியில் 120 லட்சம் கோடி- பிரதமர் மோடி

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies