அயோத்தி குழந்தை இராமர் சிலை 17-ம் தேதி நகர்வலம்!
Jul 24, 2025, 06:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி குழந்தை இராமர் சிலை 17-ம் தேதி நகர்வலம்!

Web Desk by Web Desk
Jan 2, 2024, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் மூலவர் குழந்தை இராமர் சிலை வரும் 17-ம் தேதி அயோத்தியில் நகர்வலம் வருகிறது.

பா.ஜ.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, அயோத்தியில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றையதினம் மூலவர் குழந்தை இராமர் சிலை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது.

‘பிராண பிரதிஷ்டை’ என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும், நாடு முழுவதும் இருந்து 10,000 முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சிலை, கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் குழந்தை இராமர் சிலையை காண மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

எனவே, மூலவர் குழந்தை இராமர் சிலையை வரும் 17-ம் தேதி உலகுக்குக் காட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி, இராமர் சிலை அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படவிருப்பதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்திருக்கிறார்.

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்திலும் அயோத்தி நகரில் வால்மீகி சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்புப் பகுதியிலும் அட்சதை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சம்பத் ராய் இதுகுறித்து கூறுகையில், “கோவில் கருவறையில் பாலராமர் சிலையை நிறுவும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி 22-ம் தேதி பிற்பகல் 12.20 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சுற்று வட்டாரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் சந்தைகளிலும் பக்தர்கள் ஆரத்தி எடுத்தும், பிரசாதம் வழங்கியும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பக்தர்கள் தங்கள் வீடுகளில் ஸ்ரீராம ஜோதி என்னும் தீபமேற்றி வழிபாடு செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வேண்டுகோளை பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களிடம் தெரிவித்திருக்கிறார்” என்றார்.

Tags: ProcessionAyodyaRamar StatueJanuary 17
ShareTweetSendShare
Previous Post

ஒரே ஆண்டில் 16 முறை புத்தாண்டு கொண்டாடும் விண்வெளி வீரர்கள்!

Next Post

காங்கிரஸ் ஆட்சியில் ரூ.30 லட்சம் கோடி,  பாஜக ஆட்சியில் 120 லட்சம் கோடி- பிரதமர் மோடி

Related News

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies