அயோத்தி குழந்தை இராமர் சிலை 17-ம் தேதி நகர்வலம்!
Mar 15, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி குழந்தை இராமர் சிலை 17-ம் தேதி நகர்வலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 2, 2024, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் மூலவர் குழந்தை இராமர் சிலை வரும் 17-ம் தேதி அயோத்தியில் நகர்வலம் வருகிறது.

பா.ஜ.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, அயோத்தியில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றையதினம் மூலவர் குழந்தை இராமர் சிலை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது.

‘பிராண பிரதிஷ்டை’ என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும், நாடு முழுவதும் இருந்து 10,000 முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சிலை, கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் குழந்தை இராமர் சிலையை காண மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

எனவே, மூலவர் குழந்தை இராமர் சிலையை வரும் 17-ம் தேதி உலகுக்குக் காட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி, இராமர் சிலை அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படவிருப்பதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்திருக்கிறார்.

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்திலும் அயோத்தி நகரில் வால்மீகி சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்புப் பகுதியிலும் அட்சதை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சம்பத் ராய் இதுகுறித்து கூறுகையில், “கோவில் கருவறையில் பாலராமர் சிலையை நிறுவும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி 22-ம் தேதி பிற்பகல் 12.20 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சுற்று வட்டாரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் சந்தைகளிலும் பக்தர்கள் ஆரத்தி எடுத்தும், பிரசாதம் வழங்கியும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பக்தர்கள் தங்கள் வீடுகளில் ஸ்ரீராம ஜோதி என்னும் தீபமேற்றி வழிபாடு செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வேண்டுகோளை பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களிடம் தெரிவித்திருக்கிறார்” என்றார்.

Tags: AyodyaRamar StatueJanuary 17Procession
ShareTweetSendShare
Previous Post

ஒரே ஆண்டில் 16 முறை புத்தாண்டு கொண்டாடும் விண்வெளி வீரர்கள்!

Next Post

காங்கிரஸ் ஆட்சியில் ரூ.30 லட்சம் கோடி,  பாஜக ஆட்சியில் 120 லட்சம் கோடி- பிரதமர் மோடி

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies