பிரிக்ஸ்-ல் இணைந்த சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 5 நாடுகள்!
Oct 26, 2025, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிக்ஸ்-ல் இணைந்த சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 5 நாடுகள்!

Web Desk by Web Desk
Jan 2, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஈரான் ஆகிய 5 நாடுகளும் அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாகின.

பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்த கூட்டமைப்பாகும். இந்த அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது.

அப்போது, பிரிக்ஸ் அமைப்பை விரிவாக்கம் செய்யவிருப்பதாகவும், விருப்பமுள்ள நாடுகள் இணையலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் அர்ஜென்டினா ஆகிய 6 நாடுகள் உறுப்பினராக விருப்பம் தெரிவித்தன. இந்த சூழலில், அர்ஜென்டினாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

எனவே, புதிய அதிபரான சேவியர் மிலே, பிரிக்ஸ் விண்ணப்பத்தை வாபஸ் பெற முடிவு செய்தார். காரணம், புதிய அதிபர் சேவியர் மைலியின் கொள்கைகள் அமெரிக்காவை மையமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, ஜனவரி 1-ம் தேதியான நேற்று முதல் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் ஆகிய 5 நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பில் அதிகாரப்பூர்மாக உறுப்பினராகி இருக்கின்றன.

இந்த நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் 2024-ம் ஆண்டுக்கான தலைமை ஏற்றிருக்கும் ரஷ்யா, அக்டோபர் மாதம் கசான் நகரில் உச்சி மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது. இக்கூட்டத்தில் புதிதாக உறுப்பினராகி இருக்கும் 5 நாடுகளும் பங்கேற்கின்றன.

இந்த உச்சி மாநாட்டின்போது ரஷ்யா 200-க்கும் மேற்பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து உச்சி மாநாட்டில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பில் புதிய வேகத்தையும் புதிய ஆற்றலையும் செலுத்த முடியும்.

புதிய பிரிக்ஸ் உறுப்பினர்களுடன் இந்தியா மிகவும் ஆழமான மற்றும் வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது. இரு தரப்பு ஒத்துழைப்பில் புதிய பரிமாணங்களும் சேர்க்கப்படும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக மக்கள்தொகையில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில் 42% பிரிக்ஸ் நாடுகள் ஒன்றாக உள்ளன. இவை உலகப் பொருளாதாரத்தில் 26%-க்கும் அதிகமான பங்கைக் கொண்டிருக்கின்றன.

மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 23 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ளது. பிரிக்ஸ் நாடுகள் உலகின் 30% நிலப்பரப்பையும், 18% உலக வர்த்தகத்தையும் கட்டுப்படுத்துகின்றன.

தற்போது, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இணைந்திருப்பதால், பிரிக்ஸ் அரபு உலகின் மிகப்பெரிய மற்றும் வலுவான பொருளாதாரங்களை உள்ளடக்கி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்த ஆண்டு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: bricssaudi arabiaEgyptIranuaeEthiopiaJoined
ShareTweetSendShare
Previous Post

சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடக்கம்!

Next Post

75 வது குடியரசு தின விழா ஒத்திகை! – கடும் குளிரில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு!

Related News

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies