"செபி"யே விசாரிக்கும்: அதானிக்கு புத்தாண்டில் "குட் நியூஸ்"!
Oct 23, 2025, 04:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“செபி”யே விசாரிக்கும்: அதானிக்கு புத்தாண்டில் “குட் நியூஸ்”!

Web Desk by Web Desk
Jan 3, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதானி குழுமத்தின் மீதான வழக்கை “செபி” எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இதனால் அதானி குழும பங்குகள் 15% வரை உயர்ந்திருக்கின்றன.

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராகவும், உலகளவில் 3-வது பணக்காரராகவும் இருந்தவர் இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி.  இந்த சூழலில், அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் இருப்பதாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது.

மேலும், பங்குச்சந்தை மதிப்பில் உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றது. பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது. அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் 15 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சரிவைச் சந்தித்தன.

இதனிடையே, ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச்சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இந்தக் குழுவினர் விரிவான விசாரணை நடத்தி தங்களது அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில்தான், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பில் அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்றும், விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற எந்த அவசியமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

மேலும், 22 புகார்களில் 20 புகார்களின் விசாரணையை செபி முடித்து விட்டது. மீதமுள்ள 2 வழக்குகளின் விசாரணையை செபி 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். செபியின் ஒழுங்குமுறை சட்டத்துக்குள் ஒரு குறிப்பிட்ட அளவே உச்ச நீதிமன்றத்தால் தலையிட முடியும். அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் ஆராய முடியும்.

ஒழுங்குமுறையை திரும்பப்பெற செபி அமைப்புக்கு உத்தரவிட சரியான காரணங்கள் இல்லை” என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இதையடுத்து, இத்தீர்ப்பு தொடர்பாக கௌதம் அதானி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மதிப்புக்குரிய உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு உண்மை நிலைநாட்டப்பட்டதைக் காட்டுகிறது. சத்யமேவ ஜெயதே. எங்களுக்கு உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு எங்களின் பங்களிப்பு தொடரும். ஜெய்ஹிந்த்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

 

The Hon'ble Supreme Court's judgement shows that:

Truth has prevailed.
Satyameva Jayate.

I am grateful to those who stood by us.

Our humble contribution to India's growth story will continue.

Jai Hind.

— Gautam Adani (@gautam_adani) January 3, 2024

 

இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அதானி குழும பங்குகள் 15 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. அதானி எண்டர்பிரைசஸ் 6.68 சதவீதமும், அதானி போர்ட்ஸ் & SEZ  3.56 சதவீதமும், அதானி பவர் 4.87 சதவீதமும், அதானி எனர்ஜி சொல்யூஷன் 14.39 சதவீதமும் (முன்பு இதன் பெயர் அதானி டிரான்ஸ்மிஷன்), அதானி கிரீன் எனர்ஜி 7.26 சதவீதமும், அதானி டோட்டல் கேஸ் 10.00 சதவீதமும், அதானி வில்மார் 6.82 சதவீதமும், ஏசிசி லிமிடெட் 2.08 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 3.00 சதவீதமும், NDTV 9.88 சதவீதமும் உயர்ந்திருக்கின்றன.

Tags: supreme courtAdani GroupJudgementHindenburg caseSebi investigate
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி: இந்தியா பந்துவீச்சு!

Next Post

2024 : ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது!

Related News

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

Load More

அண்மைச் செய்திகள்

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies