கர்னி சேனா தலைவர் கொலை: 31 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!
Jan 14, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்னி சேனா தலைவர் கொலை: 31 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 3, 2024, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி கொலை வழக்கு தொடர்பாக, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 31 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சுக்தேவ் சிங் கோகமெடி. ராஷ்ட்ரீய ரஜபுத்திர கர்னி சேனா பிரிவின் தலைவராக இருந்த இவர், கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி ஜெய்ப்பூரிலுள்ள தனது வீட்டில் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென வீட்டுக்குள் புகுந்த 3 பேர், சுக்தேவ் சிங் கோகமெடியை துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு கோகமெடியின் பாதுகாவலரும் மர்ம நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், கோகமெடியும், ஒரு மர்ம நபரும் உயிரிழந்தனர்.

இக்கொலை சம்பவத்தில் வன்முறை கும்பல்களின் தொடர்பு இருப்பதால், மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து, சந்தேக நபர்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 31 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே, இந்தக் கொலை தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சுக்தேவ் சிங் கோகமெடியை சுட்டுக் கொலை செய்த மர்ம நபர்கள், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நிதின், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் ரத்தோட் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, நிதினுக்கும், ரோகித்துக்கும் அடைக்கலம் அளித்த ரம்வீர் சிங் என்பவரை போலீஸார் டிசம்பர் 9-ம் தேதி ஜெய்ப்பூரில் கைது செய்தனர். இந்த சூழலில், பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் உள்ள விடுதியில் பதுங்கியிருந்த நிதின், ரோகித் ஆகியோர் டிசம்பர் 10-ம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்களுக்கு துணையாக இருந்த உத்தம் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து ராஜஸ்தான் போலீஸார் கூறுகையில், “கர்னி சேனா தலைவர் சுக்தேவ் கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறது. அக்கும்பலைச் சேர்ந்த ரோகித் கடோரா வெளிநாட்டில் பதுங்கி இருக்கிறார். அவரது உத்தரவின் பேரில்தான் நிதினும், ரோகித் ரத்தோட்டும் சேர்ந்து சுக்தேவை கொலை செய்திருக்கிறார்கள்.

அதேசமயம், பாலியல் வன்கொடுமை வழக்கில் ரோகித் ரத்தோட் சிறை செல்ல சுக்தேவ் காரணமாக இருந்திருக்கிறார். இதனால், கொலையாளி ரோகித் ரத்தோட் மற்றும் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் இடையே ஏற்கெனவே முன்பகையும் இருந்திருக்கிறது.

இக்கொலை தொடர்பாக நிதின், ரோகித், உத்தம் சிங் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் நிதின் என்பவர் முன்னாள் இராணுவ வீரராவார்.

வெளிநாட்டில் பதுங்கியுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ரோகித் கடோரா குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றனர்.

Tags: RajasthanHaryanania raidMurder caseKarni sena leader
ShareTweetSendShare
Previous Post

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி மதிப்புள்ள பன்முக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Next Post

சேலம் பெரியார் துணைவேந்தர் கைது! முன்னாள் அமைச்சர் பொன்முடி காரணம்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies