கர்னி சேனா தலைவர் கொலை: 31 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!
Jul 26, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்னி சேனா தலைவர் கொலை: 31 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

Web Desk by Web Desk
Jan 3, 2024, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி கொலை வழக்கு தொடர்பாக, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 31 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சுக்தேவ் சிங் கோகமெடி. ராஷ்ட்ரீய ரஜபுத்திர கர்னி சேனா பிரிவின் தலைவராக இருந்த இவர், கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி ஜெய்ப்பூரிலுள்ள தனது வீட்டில் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென வீட்டுக்குள் புகுந்த 3 பேர், சுக்தேவ் சிங் கோகமெடியை துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு கோகமெடியின் பாதுகாவலரும் மர்ம நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், கோகமெடியும், ஒரு மர்ம நபரும் உயிரிழந்தனர்.

இக்கொலை சம்பவத்தில் வன்முறை கும்பல்களின் தொடர்பு இருப்பதால், மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து, சந்தேக நபர்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 31 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே, இந்தக் கொலை தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சுக்தேவ் சிங் கோகமெடியை சுட்டுக் கொலை செய்த மர்ம நபர்கள், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நிதின், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் ரத்தோட் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, நிதினுக்கும், ரோகித்துக்கும் அடைக்கலம் அளித்த ரம்வீர் சிங் என்பவரை போலீஸார் டிசம்பர் 9-ம் தேதி ஜெய்ப்பூரில் கைது செய்தனர். இந்த சூழலில், பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் உள்ள விடுதியில் பதுங்கியிருந்த நிதின், ரோகித் ஆகியோர் டிசம்பர் 10-ம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்களுக்கு துணையாக இருந்த உத்தம் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து ராஜஸ்தான் போலீஸார் கூறுகையில், “கர்னி சேனா தலைவர் சுக்தேவ் கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறது. அக்கும்பலைச் சேர்ந்த ரோகித் கடோரா வெளிநாட்டில் பதுங்கி இருக்கிறார். அவரது உத்தரவின் பேரில்தான் நிதினும், ரோகித் ரத்தோட்டும் சேர்ந்து சுக்தேவை கொலை செய்திருக்கிறார்கள்.

அதேசமயம், பாலியல் வன்கொடுமை வழக்கில் ரோகித் ரத்தோட் சிறை செல்ல சுக்தேவ் காரணமாக இருந்திருக்கிறார். இதனால், கொலையாளி ரோகித் ரத்தோட் மற்றும் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் இடையே ஏற்கெனவே முன்பகையும் இருந்திருக்கிறது.

இக்கொலை தொடர்பாக நிதின், ரோகித், உத்தம் சிங் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் நிதின் என்பவர் முன்னாள் இராணுவ வீரராவார்.

வெளிநாட்டில் பதுங்கியுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ரோகித் கடோரா குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றனர்.

Tags: RajasthanHaryanania raidMurder caseKarni sena leader
ShareTweetSendShare
Previous Post

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி மதிப்புள்ள பன்முக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Next Post

சேலம் பெரியார் துணைவேந்தர் கைது! முன்னாள் அமைச்சர் பொன்முடி காரணம்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies