சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே இன்று முதல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“இன்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு இரயில் (வண்டி எண் – 06037) மதியம் 12.20 மணிக்கு மைசூர் சென்றடையும்.
மறுமார்க்கமாக, அதே தேதிகளில் மைசூருவில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு இரயில் (வண்டி எண் – 06038), இரவு 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இதேபோல, வருகிற 7-ஆம் தேதி மற்றும் 14-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு கோட்டயம் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு இரயில் (வண்டி எண் – 06091), மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.
மறுமார்க்கமாக, வருகிற 8-ஆம் தேதி மற்றும் 15-ஆம் தேதி கோட்டயத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு இரயில் (வண்டி எண் – 06092), மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்” என்று கூறப்பட்டுள்ளது.