இராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 108 அடி நீள அகர்பத்தி!
Sep 9, 2025, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 108 அடி நீள அகர்பத்தி!

Web Desk by Web Desk
Jan 3, 2024, 06:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வதோதராவில் தயாரிக்கப்பட்ட 108 அடி நீள அகர்பத்தி அயோத்தியை சென்றடைந்தது.

அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அதேசமயம், அயோத்தி இராமர் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பூஜைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவியின் சிலைகளை வடிப்பதற்காக 2 ஷாலிகிராம் கற்கள் கடந்த 2023 ஜனவரி மாதம் நேபாளத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

அதேபோல, தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து “ஜெய் ஸ்ரீராம்” என்று பொறிக்கப்பட்ட 620 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட மணி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், ராஜஸ்தான் கைவினைஞர்களால் 8 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட பளிங்கு சிம்மாசனமும் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், சத்ய பிரகாஷ் ஷர்மா என்பவர், 30 கிலோ எடையுள்ள 4 அடி நீள சாவியுடன், 10 அடி உயரம், 4.5 அடி அகலம் மற்றும் 9.5 அங்குல தடிமன் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய பூட்டை வடிவமைத்து அனுப்பி இருக்கிறார். அதேபோல, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5,000 அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட நெக்லஸை வழங்கி இருக்கிறார்.

இந்த நிலையில்தான், குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து 108 அடி நீளம், 3.5 அடி அகலத்தில் தயாரிக்கப்பட்ட அகர்பத்தி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அகர்பத்தி 3,000 கிலோ கிர் பசுவின் சாணம், 91 கிலோ கிர் பசு நெய், 280 கிலோ தேவதாரு மர மரம், 376 கிலோ குகல், 280 கிலோ தால், 280 கிலோ ஜாவ், 370 கிலோ கொப்ரா கிரஷ் மற்றும் 425 கிலோ ஹவன் பொருட்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

3,500 கிலோ எடையுள்ள இந்த அகர்பத்தி, ட்ரெய்லரில் வதோதராவில் இருந்து அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வதோதராவில் உள்ள தர்சாலியில் வசிக்கும் விஹாபாய் பர்வாத், கடந்த 6 மாதங்களாக முயற்சி செய்து இந்த அகர்பத்தியை தயாரித்திருக்கிறார்.

இவர் ஏற்கெனவே, 111 அடி நீளமான அகர்பத்தியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: incense stickRam TempleAyodyainauguration108-feet long
ShareTweetSendShare
Previous Post

ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டங்கள் திண்டாட்டங்கள் மாற கூடாது! -ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

பாரன்குயிலாசவில் பாடகி சஹீராவுக்கு 21 அடி வெண்கல சிலை!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies