இராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 108 அடி நீள அகர்பத்தி!
Jan 14, 2026, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 108 அடி நீள அகர்பத்தி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 3, 2024, 06:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வதோதராவில் தயாரிக்கப்பட்ட 108 அடி நீள அகர்பத்தி அயோத்தியை சென்றடைந்தது.

அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அதேசமயம், அயோத்தி இராமர் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பூஜைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவியின் சிலைகளை வடிப்பதற்காக 2 ஷாலிகிராம் கற்கள் கடந்த 2023 ஜனவரி மாதம் நேபாளத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

அதேபோல, தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து “ஜெய் ஸ்ரீராம்” என்று பொறிக்கப்பட்ட 620 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட மணி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், ராஜஸ்தான் கைவினைஞர்களால் 8 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட பளிங்கு சிம்மாசனமும் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், சத்ய பிரகாஷ் ஷர்மா என்பவர், 30 கிலோ எடையுள்ள 4 அடி நீள சாவியுடன், 10 அடி உயரம், 4.5 அடி அகலம் மற்றும் 9.5 அங்குல தடிமன் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய பூட்டை வடிவமைத்து அனுப்பி இருக்கிறார். அதேபோல, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5,000 அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட நெக்லஸை வழங்கி இருக்கிறார்.

இந்த நிலையில்தான், குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து 108 அடி நீளம், 3.5 அடி அகலத்தில் தயாரிக்கப்பட்ட அகர்பத்தி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அகர்பத்தி 3,000 கிலோ கிர் பசுவின் சாணம், 91 கிலோ கிர் பசு நெய், 280 கிலோ தேவதாரு மர மரம், 376 கிலோ குகல், 280 கிலோ தால், 280 கிலோ ஜாவ், 370 கிலோ கொப்ரா கிரஷ் மற்றும் 425 கிலோ ஹவன் பொருட்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

3,500 கிலோ எடையுள்ள இந்த அகர்பத்தி, ட்ரெய்லரில் வதோதராவில் இருந்து அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வதோதராவில் உள்ள தர்சாலியில் வசிக்கும் விஹாபாய் பர்வாத், கடந்த 6 மாதங்களாக முயற்சி செய்து இந்த அகர்பத்தியை தயாரித்திருக்கிறார்.

இவர் ஏற்கெனவே, 111 அடி நீளமான அகர்பத்தியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: incense stickRam TempleAyodyainauguration108-feet long
ShareTweetSendShare
Previous Post

ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டங்கள் திண்டாட்டங்கள் மாற கூடாது! -ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

பாரன்குயிலாசவில் பாடகி சஹீராவுக்கு 21 அடி வெண்கல சிலை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies