நீர்நிலைகளை சரி செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Jul 3, 2025, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீர்நிலைகளை சரி செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Jan 4, 2024, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அமைச்சர் பொன்முடிக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ஆத்தூர் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

வசிஷ்ட முனிவருக்கு, சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி தந்த காயநிர்மாலேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் அற்புதமான பூமி. ஆத்தூர் அருகே உள்ள கோனேரிப்பட்டியில் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன.

தமிழகக் கடற்கரைப் பகுதியையும் மைசூரையும் இணைக்கும் வணிகப் பெருவழியில் ஆத்தூர் கணவாயும் ஒன்று. இந்திய தொல்லியல் அளவீட்டு நிறுவனத்தால், பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்ட கோட்டைகளில் ஆத்தூர் கோட்டையும் ஒன்று. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி அதிகமான, உலகிலேயே உயரமான 146 அடி உயர முத்துமலையில் முருகன் கோவில் அமைந்துள்ள தொகுதி.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், 2014 ஆம் ஆண்டுக்கு முன்பை விட இரண்டரை மடங்கு அதிக நிதி கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை அமைக்க கடந்த ஆட்சி வழங்கிய நிதியை விட 3 மடங்கு அதிக நிதி, தமிழகத்தில் ரயில்வே துறையை நவீனப்படுத்த கடந்த ஆட்சியை விட 2.5 மடங்கு அதிக நிதி,என கடந்த 9 வருடங்களில் 10.76 லட்சம் கோடி ரூபாய் நமது மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.

தமிழகத்திற்கு நமது பாரத பிரதமர் வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ளது. 63,828 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 4,49,970 வீடுகளில் குழாயில் குடிநீர், 3,01,532 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,78,408 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 1,20,539 பேருக்கு, 1,90,151 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், சேலம் மாவட்டத்திற்கு 6682 கோடி ரூபாய் முத்ரா கடனுதவி என மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஜவ்வரிசி மூலம் வர்த்தகம் நடைபெறுகிறது. புகழ்பெற்ற இந்த ஜவ்வரிசிக்கு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு மார்ச் 2023 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கியது.

2019 ஆம் ஆண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 351 மாசடைந்த நதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடம் ஆத்தூர் தொகுதியில் உள்ள வசிஷ்ட நதி. தமிழகத்தில் உள்ள கூவம், அடையாறு, நொய்யல், தாமிரபரணி என்று ஒவ்வொரு நதியும் இன்று மாசுபட்ட நதிகளாக உள்ளன. இதனைச் சரி செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆத்தூர் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், பாலம் இல்லாததால் வசிஷ்ட நதியில் தண்ணீரில் இறங்கி ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகள், ஆற்றை கடக்க சிரமப்படுவதோடு, சில நேரங்களில் தண்ணீரில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். இங்கு ஒரு பாலம் அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

திமுக அமைச்சர் பொன்முடிக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக 5 இடங்களில் செம்மண் எடுக்க உரிமம் வழங்கியது தொடர்பாக அவர் மீதும் அவரது மகனான கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடந்து வருகிறது. இதுதான் திராவிட மாடல்.

தமிழகம் முழுவதும் தொடர்ந்து மக்கள் விரோதச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும், பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக பொறுப்பேற்க, தமிழகமும் பெரும்பங்கு வகிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiannamalai en mann en makkal
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – ஒருவர் பலி!

Next Post

இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் : இருவர் கைது!

Related News

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

கர்நாடகா : கொல்லப்பட்டு கிடந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள்!

கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies