ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை!
Aug 17, 2025, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Jan 4, 2024, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 3 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆகவே, செங்கடலில் செல்லும் இஸ்ரேலுக்குச் சொந்தமான கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹௌதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், தற்போது செங்கடலில் செல்லும் அனைத்துக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தினர். எனினும், இந்திய போர்க்கப்பல்கள் விரைந்து சென்று அக்கப்பலை பாதுகாப்பாக மீட்டு மும்பை துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. இதேபோல, பல்வேறு நாட்டுக் கப்பல்கள் மீதும் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர்க்கப்பலை செங்கடல் பகுதியில் நிலை நிறுத்தி இருக்கிறது. இக்கப்பல் மூலம் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா நடுவானிலேயே தடுத்து அழித்து வருகிறது. இதுபோல் பல ஏவுகணை அழித்திருக்கிறது.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, செங்கடலில் வந்த கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால், அந்த ஏவுகணை மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா தடுத்து அழித்து விட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் 4 படகுகளில் வந்து அக்கப்பலை வழிமறித்தனர்.

இதையறிந்த அமெரிக்க போர்க்கப்பல் 3 படகுகளை தாக்கி அழித்தது. ஒரு படகு மட்டும் தப்பிச் சென்று விட்டது. அமெரிக்காவின் இத்தாக்குதலில் ஹௌவு கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதனால், கோபமடைந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

அதேசமயம், தாக்குதல் தொடர்ந்தால் எந்தவிதமான பதிலடியில் ஈடுபடும் என்பது குறித்து அமெரிக்க உயர் அதிகாரி தெரிவிக்க மறுத்து விட்டார். ஆனாலும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடம் இருந்து ஹௌதி கிளார்ச்சியாளர்கள் மற்றொரு எச்சரிக்கையை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்றிணைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: americahouthi rebelswarning
ShareTweetSendShare
Previous Post

அலங்காநல்லூரில் ஜனவரி 17 ஜல்லிக்கட்டு!

Next Post

சென்னையில் பரவலாக மழை!

Related News

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

உக்ரைன் போரை நிறுத்தினால் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன் – ஹிலாரி கிளிண்டன்

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை -155 பாக் வீரர்கள் உயிரிழந்தது அம்பலம்!

கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்!

கோவை ரத்தினபுரியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா – கிருஷ்ணர், ராதை வேடங்களில் குழந்தைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies